tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

காஞ்சிபுரத்தில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

காஞ்சிபுரம், ஜூன் 29- காஞ்சிபுரம் செவிலிமேட்டில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பழங்கால நாணயங்கள், ஓலைச்சுவடிகள் கண்காட்சி (ஜூன் 29) சனிக்கிழமையன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பழங்கால நாணயங்கள், தொல்பொருட்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில் பழங்கால நாணயங்கள், எழுத்தாணிகளின் வகைகள், பழங்கால அளவுகோல்கள், பல்லவர், சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் காலத்து நாணயங்கள்,100க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகள் ஆகியன இடம் பெற்றிருந்தன.

தொல்லியல் ஆய்வாளர் ரா.சு.ஜவஹர்பாபு வெளி நாட்டு ரூபாய் நோட்டுகள், தங்கக்காசுகள், செப்பேடுகள் குறித்தும், தமிழ் ஆசிரியை டி.விஜயலட்சுமி எழுத்தாணி களின் வகைகள் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

ஆசிரியையிடம் செயின் பறிப்பு

சிதம்பரம், ஜூன் 29- சிதம்பரம் தேரடி தெரு வில் வசிக்கும் ரம்யாதேவி (42) சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் ஆசி ரியராக பணியாற்றி வரு கிறார். 

 இவர் வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து மாலையில் அதே பகுதியில் உள்ள சாலியன்தோப்பு பேருந்து நிறுத்தம் அருகே மாணவர்களுடன் நின்று கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணி மைக்கும் நேரத்தில் ஆசி ரியை கழுத்தில் இருந்த 9 சவரன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.  இதனை சற்றும் எதிர்பாராத ரம்யா தேவி கூச்சலிட்டார். இதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.  ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் நகையுடன் தப்பிச் சென்றனர்.

அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை

திருவண்ணாமலை, ஜுன் 29- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-2025 -ஆம் ஆண்டு பயிற்சியாளர் நேரடி சேர்க்கையானது வரும் ஜூலை 1 முதல் 15ஆம்தேதி வரையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

விண்ணப்ப கட்டணம் ரூ. 50 நேரடியாக செலுத்த வேண்டும், வயது வரம்பு  14 வயது முதல் அரசு நிர்ணயித்த வாறு இருக்க வேண்டும், 8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, முன்னுரிமை சான்றிதழ் ஆகியவற்றுடன்,  முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை செய்யப்பட வுள்ளதால்,  ஏற்கெனவே விண்ணப்பித்து பயிற்சியில் சேர இயலாதோர் மற்றும் புதியதாக விண்ணப்பித்து பயிற்சியில் சேர விரும்புவோர் தாங்கள் பயில விருப்பமுள்ள திரு வண்ணாமலை, செய்யார், ஜமுனாமரத்தூர் ஆகிய  அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், மேற்கண்ட ஆவணங்களுடன் உடன் நேரில் வருகை புரிந்து, நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்பனா சாவ்லா விருது பெற  மகளிர் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம், ஜூன் 29- துணிச்சலுடனும் எதையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு அவரது துறை சார்ந்த பணிக்காக அல்லது அவரது நடவடிக்கைகாக கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கல்பனா சாவ்லா விருது” ஆண்டு தோறும் சுதந்ந்திரதினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சரால் ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் பொன்னாடையுடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

இயற்கை சீற்றங்கள், விபத்துகள், தீ விபத்துகள் ஆகியவற்றில் இருந்து பாதிக்கப்பட்டோரை மீட்டெடுத்தல், திருட்டு மற்றும் கொள்ளை முயற்சியை தடுத்தல் போன்ற துணிகர மற்றும் வீர, தீர சாகசம் செய்த பெண்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்விருதுக்கு தகுதியானவர்கள், தமிழ்நாடு அரசின் விருதுகள்  https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்,  விண்ணப்பிக்க கடைசி நாள் 8.7.2024 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது என  அவர் தெரிவித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டை வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
 

கள்ளக்குறிச்சி, ஜூன் 29- உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் இருப்பு நிலை, விடுதி பராமரிப்பு குறித்து சனிக்கிழமை யன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உளுந்தூர்பேட்டையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சிப்காட் தொழிற் சாலைக்கு செல்லும் நான்கு வழி சாலை யில் 27 கோடி மதிப்பீட்டிலான சாலை மற்றும் சிறு பாலங்கள் பணிகளை நேரில் பார்வையிட்டு திட்ட மதிப்பீடு, சாலை பணி களின் தரம், சாலையில் உள்ள மின்விளக்கு வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். திருநாவலூர் ஒன்றி யத்தில் உள்ள மட்டிகை ஏரி நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் ரூ.116.27 லட்சம் மதிப்பீட்டில் ஏரி பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்து அனைத்து பணிகளையும் மழைக்காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

புத்தனந்தல் கிராமத்தில் 1954ஆம் ஆண்டு கட்டப்பட்ட புத்தனந்தல் அணைக்கட்டினை ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புத்தனந்தல் அணைக்கட்டு நீர் போக்கினை சீரமைத்தல் மற்றும் அணைக்கட்டிலிருந்து 6 ஏரிகளுக்கு செல்லும் வரத்துவாய்க்காலில் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் நடை பெற்று வருவதை ஆட்சியர் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  விவ சாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகளுடன் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.

உத்திரமேரூரில்அதிவேகமாக செல்லும் வாகனங்கள்: போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பு தீவிரம்

காஞ்சிபுரம்,ஜூன் 29 – காஞ்சிபுரம் உத்திர மேரூர் கீழ் ரோடு சாலை யில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து வரும் 1ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் வெளியிட்டுள்ள காவல்துறை செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: காஞ்சிபுரத்தில் அதி நவீன தொழில்நுட்ப கேமிரா மூலம் போக்கு வரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி வழக்கு பதிவு முறை ஜூலை1 முதல் நடை முறைப்படுத்தப்படு கிறது.

நாளுக்கு நாள் அதி கரித்து வரும் போக்குவரத்து குற்றங்களை வழக்கு பதிவு செய்து அதனால் ஏற்படும் விபத்துக்களை குறைக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் அதிநவீன தொழிற்நுட்ப கருவிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளன. காஞ்சிபுரம் - உத்திர மேருர் செல்லும் சாலை யில் போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் அதி வேகமாக செல்லும் வாக னங்களை கண்காணித்து வழக்கு பதிவு செய்யும் அதிநவீன தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப் பட்டு விதிமீறல் வழக்கு பதியப்பட்டு வாக னத்தின் பதிவெண் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மூல மாக அதன் உரிமையாளர்க ளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என காஞ்சி புரம் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளது.

அவசர பணியாக செல்லும் ஆம்புலன்ஸ், காவல்துறை, பாதுகாப்புதுறை, அரசு துறை வாகனங்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதுடன் அவசர மருத்துவ தேவைக்காக சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக செல்லும் பொதுமக்களின் வாகனங்களுக்கும் இதில் விலக்கு அளிக்கப்படுகிறது.

 மருத்துவ தேவைக்காக வேகமாக செல்லும் போது குறுஞ்செய்தி வரப்பெற்றவர் அவற்றை உரிய ஆவணங்களுடன் 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்திரமேருர் காவல் நிலையங்களில் சமர்பித்தால் மட்டுமே தங்கள் வாகனத்தின் மீது போடப்பட்ட வழக்கினை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.