tamilnadu

img

லஞ்சம் தர மறுத்ததால் சாலையோர கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரி அராஜகம்!

லஞ்சம் தர மறுத்ததால் சாலையோர கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரி அராஜகம்!

சென்னை, மே 22 - லஞ்சம் தர மறுத்ததால் சாலையோர கடைகளை மாநகராட்சி அதிகாரி முன்னறிவிப்பின்றி அராஜகமாக அகற்றியதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி, 178வது வட்டத்தில்,ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப அதிவிரைவு (ஓஎம்ஆர்) சாலையையும், கானகத்தையும் இணைக்கும் வகையில்  தரமணி தர்மா ம்பாள் சாலை உள்ளது. இந்தச் சாலையில் டாக்டர் தர் மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியும், அதனை சுற்றி ஏராள மான கல்வி வளாகங்கள், அரசு அலுவல கங்கள் உள்ளன. இதனால் அந்தச் சாலையில் எப்போதும் மக்கள் நட மாட்டம் இருக்கும். இச்சாலையில், டாக்டர் தர்மாம் பாள் பாலிடெக்னிக் அருகே இருபுற மும் அகன்று விரிந்த இடத்தில் 20 சாலை யோர கடைகள் இருந்தன. இந்த  கடைகளில் ஏழை எளிய மக்களுக்கும், மாணவர்களுக்கும் குறைந்த விலை யில் உணவு, தின்பண்டங்கள் கிடைந்து வந்தன. இந்த பகுதியை ஆய்வு செய்த மாந கராட்சி அதிகாரிகள், கடைகள் போக்கு வரத்திற்கு இடையூறு இன்றி உள்ள தால், அடையாள அட்டை வழங்கி வியா பாரம் செய்ய அனுமதித்து வந்த னர். இந்நிலையில் மாநகராட்சி உதவி  பொறியாளர் ராஜேஷ், காவல்துறை யினர் பாதுகாப்போடு வியாழனன்று (மே 22) காலை சாலையோர கடை களை அகற்றினார். பொக்லைன் இயந்திரங்கள் வைத்து கடைகளை நொறுக்கி, லாரிகளில் வாரிக் கொட்டி னர். இதற்கு வியாபாரிகளும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் அமைப்புசாரா சிறு, குறு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகி கே.வனஜகுமாரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் குமரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறு கையில், “மாநகராட்சி அனுமதியோடு தான் சாலையோர கடைகள் செயல் பட்டு வந்தது. வியாபாரிகளுக்கு மாநக ராட்சி அடையாள அட்டையும் வழங்கி உள்ளது. இருப்பினும், வட்ட உதவி பொறியாளர் ராஜேஷ்,  கடைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அதனை தர மறுத்ததால் முன்னறிவிப்பின்றி வந்து காலையிலேயே வந்து கடைகளை நொறுக்கி அகற்றி பழிவாங்குகிறார். வாழ்வாதாரம் பறிபோகிறதே என்று பதறி நியாயம் கேட்ட வியாபாரிகளிடம் காவல்துறையினரும், மாநகராட்சி ஊழி யர்களும் கண்ணியமற்ற முறையில், அராஜகமாக நடந்து கொண்டனர். அவ தூறாகவும், மரியாதைக் குறைவாக வும் பேசினர்” என்றார். இதனையடுத்து, மாநகராட்சி மண்டல அதிகாரி, மண்டலக்குழுத் தலைவர் ஆகியோரை சந்தித்து தலை வர்கள் புகார் அளித்து பேசினர். இந்நிகழ்வின்போது வியாபாரிகள் சங்க நிர்வாகி ரமேஷ், சிபிஎம் வேளச் சேரி பகுதிக்குழு உறுப்பினர்கள் ராம மூர்த்தி, பாபு, திருநாமம், கார்த்தி உள்ளி ட்டோர் உடனிருந்தனர்.