சென்னை:
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் பதிவேட்டையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
நாமக்கல்லில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த பகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட அலுவலக சான்றிதழில் உள்ள பெயரும், மருத்துவமனை பதிவேடுகளில் உள்ள பெயரும் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர்களும் அவர்களுக்கு கீழ் பணி புரியக்கூடியஅதிகாரிகளும் இந்த பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதுதவிர, மலைப் பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களின் குழந்தைகளின் விவரம் குறித்தும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.