tamilnadu

விடைத்தாள் திருத்தம் பணியில் குளறுபடி: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை, மே 29-பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் விடைத்தாட்களை ஆசிரியர்கள் திருத்தி மதிப்பெண் அளிக்கின்றனர். விடைத்தாட்களை திருத்தம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அரசு தேர்வுத் துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினாலும் தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவர்கள் மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்து விடைத்தாள் நகல்களை பெற்று பார்த்த போதுதான் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளி வருகின்றன.ஆசிரியர்கள் அலட்சியமாக விடைத்தாட் களை திருத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அறிந்தும் இது போன்ற தவறுகள் ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு 4,500 பேர் விண்ணப்பித்து விடைத்தாளின் நகலை பார்த்தபோது அதில் 1,700 மாணவர்களின் மதிப்பெண்கள் வேறுபட்டிருந்தது. விடைத்தாள்களை ஒரு ஆசிரியர் திருத்தினாலும் அது சரியாக திருத்தப்பட்டு இருக்கிறதா? கூட்டலில் தவறு உள்ளதா? என்பதை கண்காணிக்க படிப்படியாக 3 கண் காணிப்பாளர்கள் உள்ளனர். இப் பணியில் பட்டதாரி, முது கலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். அப்படியிருந்தும் மதிப்பெண் தவறாக வழங்கியது, முறையாக கூட்டி மதிப்பெண் அளிக்காமல் அலட்சியப் போக்கில் செயல் படுதல் போன்ற குளறபடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து 500 ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.முறையான விளக்கத்தை கொடுத்தால் அவர்கள் மீது 17-ஏ, 17 பி போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். அதன்படி அவர்க ளுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவை 3 ஆண்டுகளுக்கு ‘கட்’ செய்யப் படும். உரிய விளக்கம் தராதவர்கள் அல்லது விளக்கம் திருப்தி அளிக்காத பட்சத்தில் அவர் கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.