சென்னை, மே 9 - அம்பத்தூர் தொழிற்பேட்டை இயங்குவ தற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் பெருந்தொழில் நிறுவனங்க ளான ஹூண்டாய், அசோக் லேலண்ட், ரெனால்ட் நிஸ்ஸான் மற்றும் அவர்களு டைய முதல்நிலை உதிரி பாகங்கள் தயா ரிக்கும் தொழிற்கூடங்கள், பகுதி அளவில் இயங்குவதற்கு தமிழக அரசு இசைவு அளித்து, அவர்களும் பணிகளைத் தொடங்கி விட்டார்கள். சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட, புறநகர் மாவட்டங்களில் உள்ள பெரிய, சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவ னங்களும் பணிகளைத் தொடங்கி விட்ட னர். ஆனால், ஆசியாவின் மிகப்பெரிய அம் பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை மாநக ராட்சி எல்லைக்கு உள்ளே வருவதால், அங்கே உள்ள நிறுவனங்கள் தொழிலைத் தொடங்க முடியவில்லை. இங்குள்ள நிறுவனங்கள்தான் மேற் கண்ட பெருந்தொழில் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்து தரு கின்றார்கள். அம்பத்தூர் தொழிற்பேட்டை இயங்கவில்லை என்றால், பெருந்தொழில் நிறுவனங்கள் வேறு நிறுவனங்களில் உதிரி பாகங்கள் கொள்முதல் செய்வார்கள். அம்பத்தூர் தொழிற்பேட்டை நிறுவனங்கள் கடுமையான பாதிக்கப்படும். அம்பத்தூர் தொழிற்பேட்டை, மாநக ராட்சி எல்லைக்குள் இருந்தாலும், வட மாநிலத் தொழிலாளர்கள் தொழிற்கூடங்க ளிலேயே இருக்கின்றார்கள். எனவே, அம் பத்தூர் தொழிற்பேட்டை தொழில் நிறுவ னங்களை இயங்குவதற்கு அறிவிக்கை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.