சென்னை, மே 19-தனியார் பள்ளிகளுக்கான அனுமதி மற்றும் அங்கீகாரத்தை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாமலும், அங்கீகார எண்களை போலியாக தயாரித்தும் சில பள்ளிகள் முறைகேடாக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மழலையர் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர மொழி வழி பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிகள் தொடங்க வழங்கப்பட்ட தொடக்க அனுமதியையும், பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகார எண்களையும் தேதி வாரியாக ஆய்வு செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. தற்காலிக தொடர் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்றும், பெற்றிருந்தால் அது எந்த தேதியில் பெறப்பட்டது எனவும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட் டுள்ளது.3 வகை அங்கீகாரமும் முறையாக, கல்வியியல் மேலாண்மைத் தகவல் மைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளதா என ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மே 20 முதல் 22 வரை மூன்று நாட்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.