ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில், ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.