சென்னை, அக். 28- தமிழ்நாட்டில் சென்னை தவிர இதர மாநகராட்சிகள் அடிப்படை பணியில் ஈடுபட்டுள்ள நிரந்தர பணியாளர்களை படிப்படியாக ஒழித்துவிட்டு தனியாரிடம் விட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தஞ்சாவூர், ஓசூர், நாகர் கோவில், ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி, கரூர், கும்பகோணம் உள்ளிட்ட 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவித்தல் ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறு சீரமைத்தல் மற்றும் முறைப்படுத்துதல் குறித்த அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் பெருநகர சென்னை மாநக ராட்சி தவிர, இதர மாநகராட்சிகளுக்கான “தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிகள் 1996” உருவாக்கப்பட்டு, அப்பணி விதி கள் 1.10.1996 முதல் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், மேற்படி அரசாணை யில், நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் போது ஏற்கனவே உள்ள நகராட்சிப் பணியிடங்களை மாநக ராட்சிப் பணியிடங்களுக்கு இணையாக எவ்வாறு பொருத்துவது என்பது குறித்தும் பொது அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பணியிடங்கள் தோற்றுவிப்பு
மேற்படி 20 மாநகராட்சிகளை அவற் றின் மக்கள் தொகையின் அடிப்படை யில் நான்கு வகைகளாக வகைப்படுத்த வும், அவற்றிற்கு ஏற்ற நிலையை நிர்ணயம் செய்யவும், 20 மாநகராட்சிகளில் தற் போதைய மக்கள் தொகைக்கேற்ப, ஒரே சீரான பணியிடங்களை தோற்றுவித்து ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறு சீரமைத்து முறைப்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. மக்கள் தொகைக்கேற்ப 20 மாநகராட்சிகளை நான்கு வகையாக பிரித்து, அந்த மாநகராட்சிகளின் வரை யறையின்படி புதிதாக தோற்றுவிக்கப் படவுள்ள பணியிடங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைத்து முறைப்படுத்தப்படும் வகையில் 4,145 பணியிடங்களுக்கு அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரை யறைக்கு மிகையான பணியிடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் பணிபுரியும் பணியாளர்களை, அதே பணியிடம் காலியாக உள்ள இதர மாநகராட்சி களுக்கு பணிநிரவல் மூலம் பணியிட மாற்றம் செய்ய அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
அவுட்சோர்சிங்
அதேபோல் தற்போது அனுமதிக்கப் படும் பணியிடங்களைத் தவிர, ஏற்கனவே நிரந்தரப் பணியிலுள்ள தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர்கள், செயல் திறனற்ற மற்றும் செயல் திறன் பணியாளர்கள், அலுவலக உதவி யாளர்கள், இரவுக்காவலர், தரவு உள்ளீட்டாளர், தட்டச்சர், வரி வசூலர் மற்றும் பதிவறை எழுத்தர் ஆகியோருக்கு அவர்கள் ஓய்வுபெறும் காலம் வரை மாநகராட்சி நிதியிலிருந்து ஊதியம் வழங்கப்படும் என்றும், அந்த பணியா ளர்கள் ஓய்வு பெற்ற பின் அந்த பணியிடங் களை நிரப்பக் கூடாது என்றும் எதிர்வரும் காலங்களில் இந்த பணிகளை வெளி முகமை மூலம் (அவுட் சோர்சிங்) மேற்கொ ள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு ள்ளது. மேலும் இந்த பணியிடங்களைத் தவிர, இந்த அரசாணையில் குறிப்பிடப்படாத பணியிடங்கள் ஏதேனும் இருப்பின், அந்த பணியிடங்களில் முறையான ஊதிய விகிதங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள், அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்குப் பிறகு அந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட கூடாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பதவி உயர்வு இல்லை
மாநகராட்சி ஆணையர் பணி யிடத்தில் அந்த மாநகராட்சியின் துணை ஆணையருக்கோ அல்லது அண்டை மாநகராட்சியின் ஆணையர் அல்லது துணை ஆணையருக்கோ அல்லது கூடுதல், இணை இயக்குநர் நிலையில் உள்ள அலுவலர்களுக்கோ ஆணையர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சியின் தலைமை பொறியாளர் அல்லது தொழில் நுட்பம் சார்ந்த அலுவலர்களுக்கு ஆணையர் பொறுப்பு வழங்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்களின் பதவி உயர்வு பறிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.