tamilnadu

img

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்....

சென்னை:
தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக திமுகவின் முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.கே.எஸ். விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயனை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஏ.கே.எஸ். விஜயன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக ஓராண்டு காலம் செயல்படுவார் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சித்தமல்லியைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் (60). இவர், கடந்த 1999, 2004, 2009 ஆகிய மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளராக 4 வது முறையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

;