அஜித் தோவல் ஆளுநருடன் சந்திப்பு
சென்னை, ஆக. 31- சென்னை வந்துள்ள தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் தோவல், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்தார். இச்சந்திப் பின் போது, இருவரும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆலோ சனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
நாம் தமிழர் நிர்வாகிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
மதுரை, ஆக. 31 - திருச்சி எஸ்.பி. வருண் குமார் மீதான அவதூறு வழக்கில், முன்ஜாமீன் கோரி, நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி யான சாட்டை துரைமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
“வழக்கு விசாரணைக்கு முழுமை யாக ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கேட்டிருந்தார். ஆனால், இதே குற்றச்சாட்டு தொடர்பான முந்தைய வழக்குகளில் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை சாட்டை துரைமுருகன் தொடர்ந்து மீறி வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி பரதசக்கரவர்த்தி, “லட்சக்கணக்கானோர் பின்தொடரும் சமூக வலைத்தளங்களில் முன்னாள் முதலமைச்சர்கள், காவல் அதி காரிகள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்புவது ஏன்?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். பின்னர், சமூக வலைத்தளங்க ளில் பதிவிட்ட அனைத்துப் பதிவுகளையும் இருவர் (அரசு - சாட்டை துரைமுருகன்) தரப்பி லும் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தர விட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
இராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு
இராமநாதபுரம், ஆக. 31 - “இராமநாதபுரம் மாவட் டம், பரமக்குடியில் செப்டம்பர் 11-இல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக் டோபர் 30-ஆம் தேதி கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெய ந்தி விழா மற்றும் குருபூஜை விழாவும் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சிகளை முன் னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு செப் டம்பர் 9 முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடை யுத்தரவு (புதிய குற்றவியல் சட்டப்படி 163 பிஎன்எஸ்எஸ்) பிறப்பிக்கப்படுகிறது” என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.