tamilnadu

img

தொழில்நுட்பகதிர்

மார்பக புற்றுநோயைக் கண்டறியும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

மார்பக புற்றுநோய் வரப் போகிறதா என்பதை 5 ஆண்டுகளுக்கு முன் முன்கூட்டியே  கண்டறியும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை அமெரிக்க ஆய்வா ளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தின் சிசெய்ல் (CSAIL) மற்றும் ஜமீல் கிளினிக்  (Jameel Clinic) ஆய்வாளர்கள் இணைந்து மார்பக புற்று நோயை முன்கூட்டியே கண்டறியும் செயற்கை நுண்ணறிவு  (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த  தொழில்நுட்பத்திற்கு ‘மிராய்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

மிராய் ஏஐ அல்காரிதம், ஒரு நபருக்கு எதிர்காலத்தில்  வெவ்வேறு  காலகட்டத்தில் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்ச னைகளை,  அவரது வயது மற்றும் குடும்பத்தினரின் மருத்துவ வரலாறு போன்ற  காரணிகளைக் கொண்டு கணிக்கிறது. மற்ற மேமோகிராபி இயந்திரங்களின் தரவு களில் காணப்படும் சிறிய மாறுபாடுகள் போல இந்த மிராய்  தொழில்நுட்பத்திலும் சிறிய மாறுபாடுகள் இருந்தாலும், சீரான கணிப்புகளை மேற்கொள்ளும் வகையில் இது வடிவ மைக்கப்பட்டுள்ளது.

கூகுள் குரோமில்  3 புதிய அம்சங்கள் அறிமுகம்!

கூகுள் குரோமின் டெஸ்க்டாப் ப்ரவுசரில் (Desktop Browser), செயற்கை நுண்ண றிவு மூலம் இயக்கப்படும் மூன்று புதிய அம்சங்கள் வழங்கப் பட்டுள்ளன.

கூகுளின் ஏஐ (AI) மற்றும் ஜெமினி மாடல்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் தேடலை எளிதாக்க லென்ஸ் ஒருங்கிணைப்பு (Lens Integration), பல டேப்களில் இருந்து பொருட்களை ஒப்பீடு செய்யும் அம்சம் (Tab Compare) மற்றும் டெக்ஸ்ட் பிராம்ப்ட் (Text Prompt)-களாய் பயன்படுத்தி ஹிஸ்டரி (History)  மூலம் ஸ்மார்ட் தேடல் மேற்கொள்தல் (Smart History Search) ஆகிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப்பில் விரைவில் ஸ்டேட்டஸ் ரீஷேர் செய்யும் அம்சம்!

வாட்ஸ்அப்பில்  அப்டேட் செய்த ஸ்டேட்டஸை மற்ற பயனர்கள் ரீஷேர் (Reshare) செய்யும் அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.