கள்ளக்குறிச்சி, ஜூலை 3- மயான ஆக்கிரமிப்பை அகற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டது. அருந்ததிய இன மக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த மயான இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கக் கோரி ஜுலை 6ஆம் தேதி சவப் பாடையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாடூர் கிளை அறிவித்தது. இந்நிலையில் கள்ளக் குறிச்சி வருவாய் வட்டாட்சி யர் இதுதொடர்பாக கட்சி யின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அருந்ததியர் இன மக்கள் தொடர்ந்து பயன்படுத்த வகை செய்யப்படும் என் றும், புல எண் 64, 65இல் உள்ள இடத்தை அளக்க நட வடிக்கை எடுப்பது எனவும், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் மூலம் அருந்ததியர் இன மக்க ளுக்கு நிரந்தர மயானம் ஒதுக்கீடு செய்ய பரிந்துரைப் பது என்றும் எழுத்து மூல மான உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து 6ஆம் தேதி நடைபெறவிருந்த போராட் டம் ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி எம் ஜெய்சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர் அ.பா.பெரிய சாமி, வட்டச் செயலாளர் பி.மணி, வருவாய் வட்டாட்சி யர், காவல் உதவி ஆய்வா ளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.