சென்னை, ஆக. 1 - தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து வியாழனன்று (ஆகஸ்ட்1) மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசின் அலு வலகங்கள் முன்பு இடதுசாரிக் கட்சி கள் சார்பில் மறியல் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்று ஒன்றிய பாஜக அரசின் நாசகர பட்ஜெட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தையொட்டி ஆங்காங்கே காவல்துறையினருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு- முள்ளுவும் ஏற்பட்டது.
கே. பாலகிருஷ்ணன்
இந்த போராட்டத்தின் ஒருபகுதி யாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தலைமையில் சென்னை யில் கிண்டி பேருந்து நிறுத்த சந்திப்பிலிருந்து இந்தியன் வங்கி நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட இடது சாரிக் கட்சிகளின் தலைவர்கள் - தொண்டர்களை, அண்ணாசாலை அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை யடுத்து அனைவரையும் காவல்துறை யினர் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில் சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி.ஆர். ரவீந்திரநாத், சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஆர். வேல்முருகன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் நிர்வாகி அ.ஆப்ரகாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களி லும் மறியல் போராட்டங்கள் நடை பெற்றன.
இரா. முத்தரசன் - ஜி. ராமகிருஷ்ணன்
கோயம்புத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு மறியல் நடைபெற்றது. இதில் சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், சிபிஐ மாவட்டச் செயலாளர் சி. சிவசாமி, சிபிஐ(எம்எல்) லிபரேசன் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பங்கேறு கைதாகினர்.
பழ. ஆசைத்தம்பி
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில், சிபிஐ(எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மனோ கரன், சிபிஐ மாவட்ட துணைச் செய லாளர் ஆர். செந்தில்குமார், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாவட்ட செயலா ளர் டி.கண்ணையன் ஆகியோர் தலைமையில் மறியல் நடைபெற்றது
இதில், சிபிஐ(எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அருளரசன், சிஐ டியு மாவட்டச் தலைவர் கண்ணன், நகரச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் கணேசன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஏ.ஜி பாலன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாநகர செயலாளர் மதியழகன், மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மறியலில் ஈடுபட்டுக் கைதாகினர்.
இதேபோல சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத்- மதுரை மாநகரிலும், உ. வாசுகி- மத்தியச் சென்னையிலும் மறியலில் பங்கேற்று கைதாகினர். மாநிலம் முழுவதும் 200 மையங்களில் நடைபெற்ற இந்த மறியலில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு கைதாகினர்.