சென்னை, ஜூன் 21- ரயில்வே துறையை தனியார் கார்ப்ப ரேட்டுகளுக்கு தாரை வார்க்க பிரதமர் மோடியும் ரயில்வே வாரிய தலைவரும் விடுத்திருக்கும் அழைப்புக்கு டிஆர் இயு கடுமையாக எதிர்த்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் ஏ. ஜானகி ராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டி ருக்கிறார். அரசுத் துறையில் மக்களுக்கான சேவைத்துறையாக இருக்கும் ரயில் பயணத்தை ஒட்டுமொத்தமாக கார்ப்ப ரேட்டுகளுக்கு கதவைத் திறந்துவிடும் செயலாகும். இந்திய ரயில்வே என்பது அரசுத் துறையாக இருக்க வேண்டு மென்பது இந்தியாவின் பாதுகாப்புடன் இணைந்த ஒன்றாகும். ராணுவ பட்டா லியன்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவசர கால நடவடிக்கை யில், கலவரங்கள் அல்லது போர் மூளும் தருவாய்களில் அரசுத்துறை யின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறை யாக இருந்தால்தான் தேசத்தின் பாது காப்பு உறுதிபடுத்தப்படும். கார்ப்ப ரேட்டுகள் லாபத்தை மட்டும் குறியாக வைத்து விலைபோகக்கூடியவர்களே! ஒட்டுமொத்த இந்திய மக்களும் நமது வரிப்பணத்தில் உருவான தற்போ தைய ரயில்வே கட்டமைப்பை தனியா ருக்கு தாரை வார்த்து தனியார் கொள்ளை லாபம் அடிப்பதை தடுக்க குரலெழுப்ப வேண்டும். பயணச்சீட்டுப் பதிவு மற்றும் வாங்கும் போது மானியம் இல்லாமல் பயணச் சீட்டா? மானியத்துடன் பயண சீட்டா? என ஆப்ஷன் கொடுக்கப்படும். இந்திய ரயில்வே என்பது சேவைத் துறை யாகும். நகரங்களின் தொழில் வளர்ச்சி முதல் சிறு குறு வியாபாரிகளின் வாழ்வா தாரம் வரை தொடர்புடையதாகும் 100 நாள்செயல்திட்டத்தின் தனி யார் ரயில் இயக்குதல், பயணிகள் டிக்கட் கட்டண மானிய ஒழிப்பு மற்றும் டிக்கெட் கட்டண உயர்வு, உற்பத்தி தொழிற் சாலைகள் மற்றும் ஒர்க் ஷாப்புகளை கார்ப்பரேட் மயமாக்குவதை டி.ஆர். இ.யு. கண்டிக்கிறது. இவை அனைத்தும் தேச நலனுக்கு எதிரானது. ஆகவே, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ரயில்வேயின் ஏ.ஐ.ஆர்.எப், என்.எப்.ஐ.ஆர். சம்மேளனங்கள் ரயில்வே ஆலோசனைக் குழுவை விட்டு வெளியேறி, அகில இந்திய அளவில் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜானகிராமன் கூறியுள்ளார்.