சென்னை, ஜூன் 18- புதிய கல்விக் கொள்கையால் மாநில உரிமைகள் பறிக்கப்படும், கல்வி மத்திய அரசின் கட்டுப்பாட்டிற் குள் சென்று விடும் என கே.பால கிருஷ்ணன் கூறினார். “வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019’’ தமிழாக்க நூல் வெளியீட்டு விழா இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரி யப்பன் தலைமையில் சென்னை பெரி யார் திடலில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகை யில்,“தமிழக கல்வி அமைச்சர் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். ஊழியர் போல் நடந்து கொள்கிறார். பாஜக வின் கைப்பாவையாக அதிமுக செயல் படுவதால் இந்த தேசிய கல்விக் கொள் கையை அடிப்படையில் தமிழக அரசு எதிர்க்காது” என்றார். இந்த கல்விக் கொள்கையை விரைந்து அமல்படுத்த பாஜக நினைக் கிறது. அதனால்தான் ஜூன் 1ஆம் தேதி வரைவு அறிக்கையை வெளி யிட்டு 30ஆம் தேதிக்குள் கருத்துகளை கூறுங்கள் என கூறியிருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம் என்றும் அப்படி கருத்துக் கேட்க வேண்டுமென்றால் அனைத்து மொழிகளிலும் வெளி யிட்டு இருக்க வேண்டும். ஆங்கிலத்தி லும், இந்தியிலும் மட்டும் வெளியிட்டு கருத்துகளை கூறுங்கள் என்று கூறு வது என்ன நியாயம் இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். யாரால் முழுமையாக ஆய்வு செய்து கருத்துகளை கூற முடியும். பேருக்கு நாங்கள் கருத்து கேட்டோம், யாரும் கருத்து கூறவில்லை எனக் கூறி அப்படியே நிறைவேற்றி விடும் ஆபத்து உள்ளது என்றும் அவர் எச்சரிக்கை செய்தார்.
புதிய கல்விக் கொள்கையை பார்க்கிற போது, கல்வி முறையை அப்படியே தலை கீழாகப் புரட்டிப் போடுகிற வகையில் உள்ளது. 3 வய திலேயே குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள். 5 ஆம் வகுப்பில் ஒரு தேர்வு. 8ஆம் வகுப்பில் ஒரு தேர்வு. 10, 11, 12ஆம் வகுப்பிற்கு தேர்வு. பள்ளியிலே பயி லும் மாணவர்களை அடிமை போல் மாற்றுவதற்கான ஏற்பாடாகத்தான் இந்த கல்விக் கொள்கை உள்ளது என்றும் பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டி னார். இதுவரை அரசு தேர்வு நடத்திய தால் பாஸ் செய்து வந்தது. இந்த கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால் தனியார் முகவர்கள் மூலம் தேர்வு நடத்தப்படும். அவரவர் விருப்பம் போல் தேர்வு நடத்தி பட்டயம் வழங்குவார்கள் என்றால் கல்வியின் தரம் என்னவாகும்? ஆர்.எஸ்.எஸ். நினைக்கும் கோட்பாடுகளை பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சு புகுத்த முடியும். அதற்கான பணி யைத்தான் பாஜக செய்து வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். புதிய கல்விக் கொள்கை அமல்ப டுத்தப்பட்டால், ஆரம்பப் பள்ளி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை மத்திய அர சின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும். எனவே இந்த கல்விக் கொள்கையின் மீது பொது விவாதம் நடத்த வேண் டும். அடித்தட்டு மக்கள் வரை இதில் உள்ள ஆபத்துகளை கொண்டுசெல்ல வேண்டும். 37 மக்களவை உறுப்பி னர்களும் இதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். அவர்களது குரல் நாடு முழுவதும் ஒலிக்கும் என்றும் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
முனைவர் வே.வசந்திதேவி பேசுகையில், “இந்தியா அபாயகரமான கட்டத்திலுள்ளது. அதன் வெளிப்பாடு தான் இந்த புதிய கல்விக் கொள்கை. அதுவும் மோடி பதவியேற்ற இரண்டு நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்துக்களின் இந்தியா, இந்தியா என்றால் இந்தி என பிஞ்சு குழந்தைகளின் மனதில் விதைக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உள்ளது” என்றார்.
தி.க தலைவர் வீரமணி, “1962இல் குலக் கல்வி முறையை ராஜாஜி கொண்டு வந்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பவே அது கைவிடப் பட்டது. அதை இப்போது மீண்டும் புதிய கல்விக் கொள்கையின் மூலம் பாஜக கொண்டு வருகிறது. இடஒதுக்கீடு சமூக நீதியை ஒழிக்க வேண்டும் என் பதுதான் பாஜகவின் நோக்கம். ஜன நாயகத்தின் மீதும், மாநில உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குத லாகும்” என்றார்.
இரா.முத்தரசன், “மாணவர்கள் விடுமுறை நாட்களில் பெற்றோர் செய் யும் தொழிலுக்கு உதவ வேண்டும் என்று மோடி ஏற்கனவே கூறினார். மாணவர்கள் அனைவரும் குலக் கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதற்கு அர்த்தம்” என்றார்.
ரவீந்திரன் (திமுக),“ 13 ஆவது ஆணையம் வரை கல்விக் கொள்கை தயாரிப்பில் கல்வியாளர்கள் இருந் தார்கள். 80 விழுக்காடு படித்தவர்கள் இருக்கக் கூடிய நிலையில், மோடி ஆட்சியில் 12ஆம் வகுப்பு படித்த வர்கள் அமைச்சர்களாக உள்ளனர். அவர்கள் தயாரிக்கும் கல்விக் கொள்கை மோசமாகத்தான் இருக்கும்” என்றார்.
ஆ.கோபண்ணா, “1986-ல் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது புதிய கல்விக் கொள்கையை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். காங்கிரஸ் கொண்டுவந்த மும்மொழிக்கொள்கை யை தற்போது நாங்களே எதிர்க்கி றோம்” என்றார்.
கே.என்.காதர் மொய்தீன், “தமிழ்நாட்டில் இருமொழிக் கொள் கையால் இதுவரை எந்த குறையும் வரவில்லை. மத்திய அரசின் இந்த திணிப்புத் திட்டம் வெட்டவெளிச் சத்திற்கு வந்துள்ளது. பெரியார் மண்ணில் மத்திய அரசின் நாசகரக் கொள்கை பலிக்காது. இதற்காக இந்திய மாணவர் சங்கம் எடுக்கும் முயற்சி வெல்லட்டும்”என்றார். தமுமுக துணைப் பொதுச்செய லாளர் ஜே.ஹாஜாகனி,விசிக துணைப் பொதுச் செயலாளர் கௌதம சன்னா, மதிமுக துணைப் பொதுச் செய லாளர் மல்லை சத்யா, கல்வியாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோ ரும் கருத்துரை வழங்கினர். வட சென்னை மாவட்டச் செயலாளர் இசக்கி நாகராஜ் நன்றி கூறினார். இதில் மாநில துணைத் தலைவர் நிருபன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.