அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிபுணர் சாந்தா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.
இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
அவர் மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபூஷண் போன்ற விருதுகளை பெற்றார். இந்நிலையில் மருத்துவர் சாந்தா அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.