சென்னை:
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுகவில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். விவரம் வருமாறு:-
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், செ.செம்மலை, ஜே.சி.டி.பிரபாகர், எஸ்.கோகுல இந்திரா, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அ.அன்வர்ராஜா, டாக்டர் பி.வேணுகோபால்.தேர்தல் பிரசார குழுவில் மு.தம்பிதுரை எம்.பி., வைகைச் செல்வன், பு.தா.இளங்கோவன் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.இதனை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.