tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சித்தா, யுனானி, ஓமியோபதி முதுநிலை படிப்புக்கு சேர்க்கை 

சென்னை, செப்.7- சித்தா, யுனானி, ஓமியோபதி மருத்துவ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பை ‘www.tnhealth.tn.gov.in’என்ற சுகாதா ரத்துறையின் வலைதள முகவரி மூலம் தனித்தனியாக ஒவ்வொரு முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பிரிவிற்கும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பங்கள் இந்த இயக்குநரகம், தேர்வுக் குழு அலுவலகத்தில் வழங்கப்படமாட்டாது. மேலும், அடிப்படை தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு “www.tnhealth.tn.gov.in” என்ற வலைதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப் பேட்டினை செப்டம்பர் 8 முதல் 20  ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ள லாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் தபால் அல்லது கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 20 மாலை 5.30 மணி வரை.

விண்ணப்பதாரர்கள் எம்.டி. (ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப்படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600 106 .

கலந்தாய்வு அன்று நேரில் வரத் தவறியவர்கள் தங்களது வாய்ப்பை இழந்து விடுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை எஸ்பிஐ e-collect வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும். கடைசி தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், தபால் அல்லது கூரியர் சேவையில் ஏற்படும் கால தாமதத்திற்கு தேர்வுக்குழு பொறுப்பாகாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிச்சிறுமி வன்கொடுமை வழக்கு : 
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

கிருஷ்ணகிரி,செப். 7- கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொ டுமை வழக்கில் கைதாகி உயிரிழந்த சிவராமனுக்கு உதவியதாக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராமன் அலுவலகத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவு கருவியை தீ வைத்து எரித்ததாக கருணா கரனை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு போதிய ஓடுதளம் வசதி வேண்டும் 
துரை வைகோ எம்.பி.,வலியுறுத்தல்

திருச்சி,செப்.7-  மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி,செப்டம்பர் 7 அன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  “திருச்சி விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளேன். திருச்சி விமான நிலையம் சர்வதேச தரத்துடன் அமைந் துள்ளது. அதே நேரத்தில் அங்கு போதிய ஓடுதளம் இருந்தால்தான் விமானங்கள் வந்து செல்ல முடியும். எனவே ஓடுதள விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்துள்ளேன். விமான நிலையத்தில் இஸ்லா மியருக்கு தொழுகைக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

விமான நிலையத்தில் சமஸ்கிருத்தில் பெயர் பலகை இருந் தது தேவையில்லாத ஒன்றாகும். இதை படித்தால் பயணி களுக்கு ஏதும் தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

6 நாட்கள்  மழைக்கு வாய்ப்பு

சென்னை, செப்.7- தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: 

மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது.

இது வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 3 தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்க-வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி களை நோக்கி நகரக் கூடும்.

இதன் காரணமாக, செப்டம்பர் 13 வரைக்கும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் லேசானது முதல் மித மான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிக ளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதி களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள் ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.
 

ரூ.100 கோடி நில மோசடி:
முன்னாள் அதிமுக அமைச்சரின் தம்பியிடம் தீவிர விசாரணை

கரூர்,செப்.7- கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷிடம் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலங்களை அபகரித்த புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது உறவினர் பிரவீன் (28), உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் காவல் ஆய்வா ளர் பிரித்விராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.கைதான வர்கள்  தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஜயபாஸ்கரின் தம்பி சேகரை 2 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

கரூர் காந்தி கிராமத்தில் உள்ள சிபிசி ஐடி அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றது.

ஆம்ஸ்ட்ராங் கொலை: 10 பேர் மீது குண்டாஸ்

சென்னை, செப்.7- பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் சென்னை யில் அவரது வீட்டின் அருகிலேயே கொடூர மாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட வர்களில் பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு உள்ளிட்ட பத்து பேர் மீது காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட் டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

10 உதவி மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் 

சென்னை,செப்.7- பயிற்சி நிறைவு பெற்ற 10 ஐஏஎஸ் அதிகாரிகள் உதவி மாவட்ட ஆட்சியர்க ளாக நியமனம் செய்து தலைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். 

குளித்தலை, தேவகோட்டை, திருக்கோவிலூர், ஸ்ரீபெரும்புதூர், கோபி, கும்பகோணம், குன்னூர், பழனிக்கு உதவி ஆட்சியர்களாக நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.