அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.மருத்துவமனையில் அனுமதி
சென்னை, ஏப். 1 - மக்களவைத் தேர் தல் பணிகளில் தீவிர மாக ஈடுபட்டு வந்த தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச் சந்திரனுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இருதய பிரச்சனை தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரு வதாகவும், தற்போது அவர் மருத்து வர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித் துள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கியது
சென்னை, ஏப்.1- தமிழ்நாட்டில் பன் னிரண்டாம் வகுப்பு (பிளஸ் 2) பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகு தேர்வுத் தாள் மற்றும் விடைத்தாள் கள் அனைத்தும் மார்ச் 23 ஆம் தேதி மண்டல அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட் டன. இந்நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணியை ஏப்ரல் 2 முதல் 13-ஆம் தேதி வரை ஆசிரியர்கள் மேற்கொள் கின்றனர். இந்த பணியில் சுமார் 46 ஆயி ரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுகின்ற னர்.
விடைத்தாள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டதும், மதிப்பெண் பதி வேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 6 அன்று தேர்வு முடிவு கள் வெளியிடப்படவுள்ளன.
சிபிஎம் தலைவர்கள் இன்றைய பிரச்சாரம்
கே.பாலகிருஷ்ணன் -
மாநில செயலாளர்
விருதுநகர்
ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
வடசென்னை
டி.கே.ரங்கராஜன்
மூத்த தலைவர் - சிபிஐ(எம்)
கோவில்பட்டி