tamilnadu

img

ஆக.17 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை... செங்கோட்டையன்

சென்னை:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், “அரசுப் பள்ளிகளில் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு வரும் ஆகஸ்ட்17-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்றார்.11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ‘தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்றும் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த பிறகு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக்கேட்டு, அதன்பின் னர் அனைத்துத்துறைகளுடன் முதல்வர் கலந்தாலோசித்து முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

;