tamilnadu

img

மறுதேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

சென்னை, மார்ச் 24- தமிழக சட்டமன்றப் பேரவை மறுதேதி குறிப்பிடப்படாமல் செவ்வாயன்று (மார்ச் 24) ஒத்தி வைக்கப்பட்டது. மானியக் கோரிக்கைகள் நிறை வேற்றத்திற்காக சட்டப்பேரவை மார்ச் 9 அன்று கூடியது. ஏப்ரல் 9 ஆம் தேதி வரைக்கும் 26 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி யாக கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் கோரிக்கை வைத்தன. ஆனால் அக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும் மார்ச் 31 ஆம் தேதியோடு முடித்துக்கொள்ள அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு பேரவை யிலும் அறிவிக்கப்பட்டது.  கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அச்சுறுத்தி வந்ததால் எதிர்க் கட்சிகள் சட்ட மன்ற கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக் கணித்தன. மூன்றாவது முறையாக கூடிய சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத் தொடரை ஒத்தி வைக்காமல் மார்ச் 24 ஆம் தேதியோடு முடித்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதனால், ஒரே நாளில் 4 மசோதாக்களும், 27 மானியக் கோரிக்கைகளும் விவா திக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் பேரவைத் தலை வர் ப. தனபால் ஒத்தி வைத்தார்.