tamilnadu

img

நடிகர் ஸ்ரீகாந்த் விதிகளை மீறி வாக்களிப்பு தேர்தல் ஆணையத்திடம் விபரம் அளிப்பு

சென்னை:

நடிகர் ஸ்ரீகாந்த் விதிகளை மீறி வாக்களித்துள்ளதாக தமிழகதலைமைத் தேர்தல் அதிகாரிசத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது.

இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் நடிகர்கள் சிவகார்த்தி கேயன், ஸ்ரீகாந்த் ஆகியோர் வாக்குச் சாவடி அலுவலரிடம் சிறப்பு அனுமதிபெற்று வாக்களித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சிவகார்த்திகேயன் போன்று நடிகர் ஸ்ரீகாந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் விதியை மீறி வாக்களித்துள்ளார் என அறிக்கை பெறப்பட்டுள்ளது. 

வாக்காளர் பட்டியலில் இருந்து சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் பெயர் நீக்கப் பட்டது பற்றியும் விசாரிக்கப்படும். நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் நூறு சதவீதம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை விவகாரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார். 

;