tamilnadu

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் கோரிக்கையால் நடவடிக்கை சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு

சென்னை, செப்.17-  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் -பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் கோரிக்கையால், கலைத் திருவிழா போட்டிகளில் சிறப்பு பள்ளி மாண வர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது: பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றியாளர் களின் விவரங்களை எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்வதற்கு வருகிற 27 ஆம் தேதி  வரை நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

இந்த போட்டிகளில் அரசு மற்றும் அரசு  உதவி பெறும் பள்ளிகள் (சிறப்பு பள்ளிகள் உட்பட) அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த விவ ரத்தை அனைத்து பள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கு (சிறப்பு பள்ளிகள் உட்பட) தெரி வித்து மாணவர்கள் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் துறையின் கீழ் இயங்கும் சுமார் 300 சிறப்பு  பள்ளிகளில் இந்த கலைத்  திருவிழா  நடத்தப்படவில்லை. இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக் கான சங்கத்தின் தலைவர்கள் என். நம்புராஜன், பா.ஜான்சிராணி, வில்சன்  ஆகியோர் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு, மாநில திட்ட இயக்குநர் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.