tamilnadu

img

ஆதிவாசி மக்களின் உரிமைப் போராளி ஸ்டான் சுவாமியை அநியாயமாக கைது செய்த பாஜக அரசு... சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம்

சென்னை:
ஆதிவாசி மக்களின் உரிமை போராளியும்  சமூக ஆர்வலருமான பாதிரியார் ஸ்டான் சுவாமியை அநியாயமாக கைது செய்த மத்தியபாஜக அரசுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத்தலைவர் எஸ்.நூர்முகமது, மாநிலப்பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

 ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசி மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வந்த இயேசு சபையைச் சேர்ந்த 83 வயது நிரம்பியபாதிரியார் ஸ்டான் சுவாமியை மும்பை தேசியபுலனாய்வு முகமை ( NIA ) பீமா கொரேகான் சம்பவத்தைக் காரணம் காட்டி கைது செய்திருக்கிறது. இந்த கைது நடவடிக்கையை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டுமென மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது. 2017 ஆம் ஆண்டில் பீமா கொரேகானின் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பல்வேறு அரசியல்கட்சிகள் - சமூக இயக்கங்கள் - கல்வி யாளர்கள் - மனித உரிமைப் போராளிகள் குரல் கொடுத்தனர். இவ்வாறு தலித் மக்களுக்காககுரல் கொடுத்தவர்களை மத்திய அரசு தேசவிரோதிகள் என பட்டம் சூட்டி ,தனது இந்துத்துவா - தாராளமயக் கொள்கைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை - போராடுபவர்களை தேச விரோத சட்டத்தின் அடிப்படையில் கைது செய்து வருகிறது. 

மனிதத்தன்மையற்ற மத்திய அரசின் செயல்
பீமா கொரேகானுக்கு ஒருமுறை கூட சென்று வராத இப்பாதிரியார் ஸ்டான் சுவாமிஅவர்கள் அரசின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரெனஅவருடைய வயது முதிர்வையும், மாநிலஅரசின் வேண்டுகோளையும் மீறி இரவோடுஇரவாக கைது செய்து மும்பைக்கு அழைத்துச்சென்று இந்த கொரோனா காலத்தில்சிறையில் அடைத்து கொடுமை செய்துள்ளனர். மனிதத்தன்மையற்ற இந்த செயலை இந்தியாவில் உள்ள அறிவுஜீவிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்த்த போதும் மத்திய அரசு மனிதத்தன்மையற்ற முறையில் இந்த செயலில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது.

 உடனடியாக விடுதலை செய்திடுக!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க முதலாளிகள் ஆதிவாசி மக்களின் வாழ்விடங்களை அபகரித்தும், அம்மக்களை குறைந்த கூலிக்கு கட்டாயப்படுத்தி வேலை வாங்கியும் வருவதைஎதிர்த்தும், ஆதிவாசி மக்களின் கல்வி, சுகாதாரம், வாழ்வு மேம்பாட்டிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து செயல்பட்டு வரக்கூடிய பாதிரியார் ஸ்டான் சுவாமியை மத்திய பாஜக அரசுகைது செய்திருப்பது முதலாளிகளுக்கு ஆதரவான செயலாகவும், மத்திய அரசை எதிர்க்கக்கூடியவர்களை இவ்வாறு கொடுமைப் படுத்துவது அரசின் பாசிசத் தன்மையை வெளிக்காட்டுவதாகவே அமைந்துள்ளது. மத்திய அரசின் ஜனநாயக விரோத, சிறுபான்மை விரோத இந்த நடவடிக்கையை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பாதிரியார் ஸ்டான் சுவாமி மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளிலிருந்து முழுமையாக விடுவித்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.