tamilnadu

img

குடிமனைப் பட்டா, இனச்சான்றிதழ் கேட்டு பழங்குடியின மக்கள் போராட்டம்

திருவள்ளூர், ஜூலை 12 -  பழங்குடி இன மக்களுக்கு குடி மனைப் பட்டா, இனச் சான்றிதழ் உள்ளிட்டு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில்  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று (ஜூலை 12) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் 1800 குடும்பங்க ளுக்கு  குடிமனை பட்டா  வழங்க வேண்டும் வேண்டும் என கோரி மனு கொடுத்து ஒர் ஆண்டு ஆகிறது. இந்த மனு மீது  இதுவரை எவ்வித நடவடிக்கையும்  எடுக்கப்பட வில்லை. இதனைத் தொடர்ந்து தாழவேடு, புலிகுண்டா, காஞ்சிப்பாடி, பாரி வாக்கம், நெமிலிச்சேரி, ஏகாட்டூர், விளாப்பாக்கம், திருக்கண்டலம், எஸ்.வி.ஜி.புரம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 500 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு, குடி மனைப் பட்டா, இனச் சான்றிதழ், தொகுப்பு வீடுகள், கறவை மாடு, மானியத்துடன் தொழில் கடன்கள் போன்றவற்றை வழங்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட னர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சி யர் மகேஸ்வரியிடம் வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சி யர்  ஒரு மாதத்திற்குள் குடிமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இனச் சான்றிதழ்கள் முகாம் நடத்தி அதில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். கொண்டாரெட்டிஸ் எஸ். டி. சான்றிதழ் குடும்ப உறுப்பினர்க ளுக்கு சான்றிதழ் இருந்தால் அதை மையப்படுத்தி கொடுக்க வேண்டும் என கேட்டதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பூந்தமல்லி பகுதியில் உள்ளவர்க ளுக்கு திருவள்ளூரில் மாற்று இடம் வழங்கவும் திட்டம் உள்ளது என்றும் ஆட்சியர் கூறினார். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழரசு தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, ஆதிவாசிகள் தேசிய மேடை அமைப்பின் மத்தியக்குழு உறுப்பி னர் ஏ.வி.சண்முகம், மாவட்டத் தலை வர் ஜி.சின்னதுரை, மாவட்ட துணை நிர்வாகிகள் கருணாமூர்த்தி, வஜ்ஜிரவேலு, கணேசன், மணி கண்டன்,  விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், முன்னாள் தலைவர் கே.செல்வராஜ், விதொச மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ரமா, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ். கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.