நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்தும், நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து வேண்டும், மாநிலங்களே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் முழு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (ஜூலை 4) சைதாப்பேட்டையில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.ஆனந்த்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, மாவட்டச் செயலாளர் ரா.பாரதி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செபஸ்டின் உள்ளிட்டோர் பேசினர்.