tamilnadu

img

இன்சூரன்ஸ் சட்டத் திருத்தத்தை கைவிடுக! அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, டிச. 6 - இன்சூரன்ஸ் சட்டங்களை திருத்துவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது. இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் டிசம்பர் 7-9 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.

இதனை யொட்டி அமைப்பின் துணைத் தலைவர்  பி.பி.கிருஷ்ணன், இணைச் செயலாளர் எஸ்.ரமேஷ் குமார் ஆகியோர் வெள்ளி யன்று (டிச.6) சென்னையில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் வளர்ச்சிக்கு எல்ஐசி சுமார் 40 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில், இன்சூரன்ஸ்  சட்டம், ஐஆர்டிஏ சட்டம், எல்ஐசி சட்டம் உள்ளிட்டவற்றை நடைபெறுகிற நாடாளு மன்ற கூட்டத்தொடரில் திருத்த உள்ளனர். இதனை கைவிட வேண்டும்.

எல்ஐசி, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 3, 4ஆம் நிலையில் ஒரு லட்சம் ஊழியர்கள் பணியாற்றிய நிலை மாறி தற்போது சுமார் 45ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் நிலை உள்ளது. புதிய ஊழியர்கள் தேவை இருந்தும் ஆட்களை நியமிக்க தடையாக ஒன்றிய அரசின் கொள்கை உள்ளது. ஓரியண்டல், யுனைடெட் இந்தியா உள்ளிட்ட 4 காப்பீட்டு நிறுவனங்களை இணைத்திட வலியுறுத்தி வருகிறோம். பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் ஒன்றிய அரசு, காப்பீட்டு நிறுவனங்களை இணைத்து மேம்படுத்த மறுக்கிறது

. இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்படு கிறது. இத்தகைய பிரச்சனைகளை செயற்குழு விவாதித்து அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுக்க உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிகழ்வின் போது அமைப்பின் நிர்வாகிகள் கிரிதன், கோபிநாதன், சிவசுப்பிர மணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

சிறப்புக் கட்டுரை : பக்கம் 5