tamilnadu

img

ஜப்பான் துணைத் தூதரிடம் அஸாஹி தொழிலாளர்கள் மனு

சென்னை, மே. 13 -காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் இருங்காட்டுகோட்டையில் அஸாஹி இந்தியா கிளாஸ் லிட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஹூண்டாய், டொயோட்டா, ஃபோர்டு, உள்ளிட்ட கார்மற்றும் ஆட்டோ நிறுவனங்களுக்கு கண்ணாடிகளை உற்பத்தி செய்து தருகிறது.இந்த நிறுவனத்தில் 240 நிரந்தர தொழிலாளர்களும், சுமார் 800 காண்ட்ராக்ட் மற்றும் பயிற்சி தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர்.தொழிற்சங்கம் அமைத்தற்காக 28 நிரந்தர தொழிலாளர்ளை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. 6 பேர் பணியிடை நீக்கமும்,பெரும்பாலான தொழிலாளர்களுக்கு காரணம் கோரும் அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மார்ச் 25 முதல் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். நிர்வாகம் பிரச்சனையை தீர்க்க முன்வராமல் உள்ளது. இந்நிலையில் போராட்டத்தின் 50வது நாளான திங்களன்று (மே.13)சென்னையில் உள்ளஜப்பான் துணைத்தூதரகத்திற்கு சிஐடியு காஞ்சி மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் அசாஹி தொழிலாளர்கள் மனு கொடுக்க வந்தனர். காவல்துறையின் தலையீட்டிற்கு பிறகு துணைத்தூதர் கொஜிரோ ஒச்சியாமா-வை சந்தித்து எஸ்.கண்ணன் மனு அளித்தார்.இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.கண்ணன், “துணைத்தூதர்மனுவை பெற்றுக் கொண்டதோடு, நிர்வாகத்திற்கு உரிய அறிவுரை வழங்குவதாகவும், ஜப்பான் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தார்” என்று கூறினார். இந்த போராட்டத்தில் சிஐடியு துணைச் செயலாளர் கே.பகத்சிங் தாஸ், கிளைத்தலைவர் எம்.ஜோசப், செயலாளர் ஜி.லட்சுமணன், பொருளாளர் கே.பாலாஜி, நிர்வாகிகள் ஏ.ஜெனிட்டன், டி.விஜயகுமார், எஸ்.தியாகராஜன், ஏ.வேலாயுதம் பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.