சென்னை,அக்டோபர்.21- ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலத்துறை திட்டங்களில் பயன்பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலத்துறை திட்டங்களான தொல்குடி, நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், CM Arise ஆகியவற்றின் கீழ் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெறலாம். CM Arise திட்டத்தில் தொழில் தொடங்க 35% வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்