tamilnadu

img

அமெரிக்கப் பயணம் நிச்சயம் வெற்றிகரமாக அமையும்! முதலமைச்சர் நம்பிக்கை

சென்னை, ஆக. 28 - தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மாநி லத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு முக்கிய திட்டங் களை செயல்படுத்தி வருகிறார். 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொரு ளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கெனவே, துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று முதலீட்டாளர்களுக்கு விடுத்ததன் மூலமும், கடந்த ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியதன் மூலமும், 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களை சந்தித்து சர்வதேச அளவில் தமிழ கத்திற்கு தொழில் முதலீடுகளை கொண்டு வரும் வகையில் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (ஆக.27) அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக சென்னை விமான நிலை யத்தில் செய்தியாளர்களை சந்தித்த  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அமெரி க்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ போன்ற நகரங்களின் தொழில் நிறு வனங்களின் தலைவர்களை சந்திக் கிறேன். 17 நாட்கள் அரசுப் பயணமாக அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கத் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ள இருக்கிறேன்”  என்றார்.

மேலும், “2030-க்குள் ஒரு லட்சம் கோடி டாலர் இலக்கை எட்டுவோம். உலகின் கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் ஈர்க்க அமெரிக்கா செல்கிறேன்.  இந்த பயணம் நிச்சயம் வெற்றிகரமாக அமையும்” என்று தெரிவித்தார்.

அமைச்சரவை மாற்றம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், “மாற்றம் ஒன்றுதான் மாறாதது” என்றும் பொறுமை காக்க வேண்டும் என்றும் கூறினார்.