விழுப்புரம் , ஜூன் 23- விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் நக ராட்சி 33-வது வார்டில் தெரு மின்விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கடந்த மே மாதம் 14-ம்தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஆனால் நகராட்சி நிர்வாகமோ தெரு மின்விளக்கு அமைக்கவோ, சாலை அமைக் கவோ இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து வாலிபர் சங்கத்தினர் கேட்டபோது திண்டிவனம் நகராட்சி பொறியாளர் பவுல்செல்வம் தரக்குறைவான நடந்துகொண்டதாக குற்ற ச்சாட்டு எழுந்துள்ளது. மக்கள் நலனுக்காக பேசச்சென்ற வாலி பர் சங்க நிர்வாகிகளிடம் கண்ணியக் குறைவான பேசிய பொறியாளர் பவுல்செல் வத்தை கண்டித்தும், 33-வார்டில் தெரு மின்விளக்குகள் உடனடியாக அமைத்து தரும்படியும் வலியுறுத்தி வாலிபர் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் வியாழக் கிழமை தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.கண்ண தாசன், திண்டிவனம் வட்ட செயலாளர் ஏ.ம. சதீஷ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் கா.ரவிசந்திரன், சிபிஎம் திண்டிவனம் நகர செயலாளர் ஆர.பி.குமரேசன், சிஐடியு மண்டல தலைவர் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடனடியாக விரைந்து வந்த காவல் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளி யன்று (ஜூன்21) திண்டிவனம் நகராட்சி நிர்வாகம் தெரு மின்விளக்குகளை அமைத்து கொடுத்தது. இருண்டு கிடந்த தங்கள் பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்படு வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மக்கள் வாலிபர் சங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.