பூமி தனது ஈர்ப்பு விசையால் 2024 PT5 என்ற சிறிய ஆஸ்ட்ராய்டு - விண்கல்லை தனது சுற்றுப்பாதை அருகே கொண்டு வருகிறது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளாக இருக் கின்ற பூமியின் முதன்மை துணைக் கோளான நிலவை போலல்லாமல், இந்த “புதிய மினி-நிலா” இரண்டு மாத காலம் நமக்கு ஒரு நிலவுபோலத் தெரி யும். பின்னர் நமது பூமிக்குப் பின்னால் உள்ள சிறுகோள் பெல்ட்டில் இருக்கும் தனது தாய் வீட்டிற்குத் திரும்பிவிடும். தன் போக்கில் போய்க்கொண்டி ருக்கும் ஒரு கற்கோளத்தை பூமி தனது ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் கொண்டு வருவதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களின் கருத்துப்படி 2024 PT5 போன்ற ஒரு சிறுகோள் சுமார் மணிக்கு 3,540 கி.மீ என்ற மெதுவான வேகத்தில் நகர்ந்தால், பூமியின் ஈர்ப்புப் புலம் அதன் மீது வலுவான தாக்கத்தைச் செலுத்தும். அதன் விளைவாகத் தற்காலிகமாக பூமியால் ஈர்க்கப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதை யில் இருக்கும். “மினி-மூன் நிகழ்வுகள்” என்று அழைக்கப்படும் ஆய்வில் இந்தச் சிறுகோள் முதன்முதலில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்று நாசாவின் ‘ஆஸ்டி ராய்டு டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம்’ (ATLAS) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரண்டாம் நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால், வெறும் கண்க ளால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடியாது. ஒரு நல்ல தொலை நோக்கி இருந்தால் இந்தச் சிறிய நிலாவைத் தெளிவாக கண்டு ரசிக்க முடியும். 2024 PT5 விண்கல் தோராயமாக 32 அடி (10மீ) நீளம் கொண்டது. இது நமது நிலவுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறி யது. (நிலவின் சுற்றளவு 10,921 கிமீ) இந்தச் சிறுகோள் செப்டம்பர் 29-ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையில் நுழையும் என்றும், பின்னர் நவம்பர் 25-ஆம் தேதி வெளியேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது இதுபோன்ற சிறிய நிலவுகள் இதற்கு முன்னதாக வும் தோன்றியுள்ளன. சில சிறுகோள்கள் மீண்டும் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்கு வருகின்றன. ‘2022 NX1’ என்ற சிறுகோள் 1981-இல் சிறிய நிலவாக மாறியது. 2022-இல் மீண்டும் அது தோன்றியது. ‘2024 PT5’ எனும் இந்தச் சிறுகோள் 2055-இல் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக் குத் திரும்பும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
பா.ஶ்ரீகுமார்