tamilnadu

சென்னையில் பேன் மூலம் பரவும் புதிய வகை காய்ச்சல்

சென்னை, நவ. 29- எலி காய்ச்சல், பறவை காய்ச்சல், சிக்குன்குனியா என்று ஒவ்வொன்றாய் வந்து வந்து மிரட்டி சென்றது. இப்போது டெங்கு காய்ச்சல் தமிழகத்தையே மிரட்டிக் கொண்டிருக்கிறது. டெங்குவை ஒழிக்க அதிகாரிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் புதிதாக ஒரு வகை காய்ச்சல் குறித்த தகவல் வந்துள்ளது.  கீழ்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவ மனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு  இந்த புதிய வகை காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ‘ஸ்கிரப்டைபஸ்’ என்ற வகையை சேர்ந்த இந்த காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 1400 பேர் இந்த புதிய வகை காய்ச்ச லால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த வகை காய்ச்சல் தாக்கியவர்களுக்கு காய்ச்சல் உச்சபட்ச அளவாக இருக்கும். உடல் வலி, தலைவலியும் இருக்கும். தீயினால் ஏற்படும் கொப்பளங்களை போலவும் உடலில் தோன்றும். மனநல மருத்துவமனையில் காய்ச்சல் தாக்கிய வர்களுக்கு நோய் எதிர்ப்புக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி மருத்துவத்துறை உயர் அதிகாரி களிடம் கேட்டபோது, இது பேன் போன்ற தலையில்  உள்ள பூச்சிகள், தெள்ளுப்பூச்சி ஆகியவற்றின் மூலமாக இந்த காய்ச்சல் பரவுவதாகவும் கூட்டமாக ஒரே இடத்தில் இருக்கும்போது இந்த காய்ச்சல் பரவும் என்றும் கூறினர். இதுகுறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் இந்த வகை காய்ச்சல் குணப்படுத்தக்கூடியதே என்றும் அவர்கள் கூறினர்.