tamilnadu

img

புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வங்கக் கடலில் நாளை உருவாகிறது!

சென்னை, அக்.12- வங்கக்கடலில் அக்டோபர் 14-ஆம்  தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி  உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்  துக்கு பல மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும், என்றும்; குறிப்பாக,  அக்டோபர் 15-ஆம் தேதி தமிழகத்  திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்  படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள் ளது. தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி தீவிரம் அடைந்து காற்றழுத்த  தாழ்வுப் பகுதியாக மாறும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. 

டி.என். அலெர்ட் செயலி

பருவ மழைக்கான முன்னெச்ச ரிக்கை தகவல்கள், வானிலை மைய தகவல்கள், அணைகளில் நீர் இருப்பு விவரங்கள் உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ளும் வகையில்  ‘டிஎன்.அலர்ட்’ என்ற செயலியை முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் அறிமுகப்படுத்தினார்.

இதனை பொதுமக்கள் தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து, பருவமழை எச்சரிக்கை பற் றிய தகவல்களை முன் கூட்டியே தெரிந்து கொள்ளலாம். 

இந்த செயலியில் மழை பாதிப்பு கள் தொடர்பாக பொதுமக்கள் தங்க ளது புகார்களை தெரிவிக்கும் வசதி யும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.  அதில், சாலைப் பிரச்சனை, வெள்ளப் பாதிப்பு பிரச்சனைகள் உள்ளிட்டவை பற்றியும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பதிவிடலாம்.