போலிச் சான்றிதழில் பணிக்கு சேர்ந்த
ஊராட்சி செயலாளர்
ராணிப்பேட்டை, ஜூன். 27 – ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா மேல்குப்பம் கிராமத்தில் வசிக்கும் கிருபாகரன் (49) டி.சி. குப்பம் ஊராட்சி செயலா ளர் பதவிக்கு 10ஆம் வகுப்பு போலிச் சான்றிதழ் பெற்று பணிக்கு சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஆற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். பாஸ்கர் ஆற்காட்டில் சான்றிதழ்களை சரி பார்த்த போது கிருபாகரன் சமர்ப்பித்திருந்த ஆவணங்கள் போலியானது என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கிருபாகரனை தற்காலிக பணிநீக்கம் செய்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நிரந்தர பணி நீக்கம் செய்து புதனன்று (ஜூன் 26) ரத்தனகிரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
சட்ட விழிப்புணர்வு குறித்த நடமாடும் வாகனம்
கடலூர்,ஜூன் 27- தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு குறித்த நடமாடும் வாகனம் துவக்க விழா கடலூரில் நடைபெற்றது
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியு மான விஜயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நடமாடும் சட்ட விழிப்புணர்வு ஊர்தி கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது. வருகின்ற ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை பொதுமக்கள் அனை வருக்கும் எடுத்து செல்லும் விதமாக இந்த சட்ட விழிப்புணர்வு வாகனம் செயல்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் பிரகாஷ், வித்யா, வேடியப்பன் பத்மாவதி, கடலூர் பார் அசோசியேஷன் செயலாளர் சுரேஷ் குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் அமுத வல்லி, செயலாளர் கார்த்திகேயன், அரசு வழக் கறிஞர் ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சியில் ஜூலை 1 ஜமாபந்தி
கள்ளக்குறிச்சி, ஜுன் 27- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில். பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்தது.
மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடை பெற்றதை தொடர்ந்து தற்காலிகமாக நடைபெறா மல் இருந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 1.7.2024 (திங்கட்கிழமை) முதல் அனைத்து திங்கட் கிழமைகளிலும் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித் துள்ளார்.