ஐக்யூஓஓ சமூக வலைதளத்திற்கு அமோக வரவேற்பு
சென்னை, ஜூன் 5- உயர் செயல்திறன் கொண்ட செல்போன் பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ நிறுவனம் துவக்கிய பிரத்யேக ஐக்யூ ஓஓ கனெக்ட் என்னும் அதி காரப்பூர்வ சமூக வலை தளத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையானது 10 லட்சத்தை எட்டியுள்ளது.
அதன் நுகர்வோர், புதிய பிராண்டுகளை தேடு பவர்கள் மற்றும் வாடிக்கை யாளர்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஒரு சான்றாக உள்ளது என்று அந்நிறுவனம் கூறி யுள்ளது.ஐக்யூஓஓ கனெக்ட் என்பது, புதிய தயாரிப்புகள் அறிமுகத்திற்கு முன் அது குறித்து இந்த தளத்தில் அறிந்து கொள்ள முடி யும். பிஜிஎம்ஐ கேமிங் அமர்வுகள், புகைப் படங்கள், கருத்துகளை வெளிப்படுத்தும் அமர்வு கள் உட்பட பல்வேறு விஷ யங்களுக்கு இது துணை நிற்கிறது என அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
மனைவி கழுத்தை அறுத்துக் கொலை
சென்னை, ஜூன் 5- திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட செல்லாத்தூரை சேர்ந்தவர் விஜயன் (35) என்ற ராணுவவீரர் இவரது மனைவி மோகனா (30).இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விஜயன் ஒரு மாத கால விடுமுறையில், அசாமில் இருந்து சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகறாறில் விஜயன் மனைவி மோகனாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
மதுபானம் விற்ற 5 பேர் கைது
சென்னை, ஜூன் 5- வாக்கு எண்ணிக்கை நாளன்று வட சென்னையில் மதுபானம் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாயன்று (ஜூன் 4) நடைபெற்றது. இதனால் தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கபட்டது. இதை பயன்படுத்தி வட சென்னையில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.வியாசர்பாடி சுந்தரம் 1ஆவது தெருவைச் சேர்ந்த விமலா (40) என் பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.