ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்களின் வரலாறு உ.வாசுகி
“பெண் நேற்றும் இன்றும்” என்கிற அற்புதமான நூலை நர்மதா தேவி ஏராளமான தரவு களுடன் நமக்கு வழங்கி இருக்கிறார். பாரதி புத்தகாலயத்தின் புக் டே தளத்தில் 2023ல் தொடராக எழுதப் பட்டதே தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. 8 பகுதிகளுடன் 510 பக்கங்கள் கொண்ட இந்நூலை வாசிக்கும் போது அதற்குப் பின்னால் இருக்கும் கடும் உழைப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. சம்பவங்களின் தொகுப்பாக இல்லாமல், பெண்கள் பல்வேறு பரிமாணங்களில் சந்திக்கும் சுரண்டலையும் ஒடுக்கு முறையையும் வரலாற்றுப் பின்புலத்தோடு மட்டு மல்ல, வர்க்கப் பின்புலத்தோடு எழுதி யிருக்கிறார்.
பெண்ணடிமைத்தனத்தின் தோற்றம் என்பது வர்க்க சமூகம் உரு வானதோடு ஒத்திசைந்து வந்தது என்பதை மார்கன், எங்கெல்ஸ் உள்ளிட்ட பல ஆளுமைகளின் உதவி யோடு நூலாசிரியர் விளக்குகிறார். சமூக வளர்ச்சியினூடே, குடும்ப முறை மை எப்படி மாற்றத்திற்கு உள்ளானது என்பதை முன் வைப்பதன் மூலம், குடும்பக் கட்டமைப்பு புனிதமானது, கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்கிற மாய பிம்பத்தை தகர்க்கிறார்.
முதலாளித்துவத்திற்கு முந்தைய காலகட்டங்களின் எச்சமான பெண் அடிமைத்தனம், முதலாளித்து வத்தால் தகர்க்கப்படாமல் தன்வயப் படுத்தப் பட்டது. இதற்கான காரணம் பெண் தொழிலாளியின் மலிவு உழைப்பை பயன்படுத்தி லாபம் ஈட்ட முடியும் என்பது மட்டுமல்ல, பெண்ணின் வீடு சார் இலவச உழைப்பு, ஒரு தொழிலாளி உழைத்து விட்டு மறுநாள் மீண்டும் வந்து உழைப்பு சக்தியைக் கொடுப்ப தற்கான ஆதார வேலைகளுக்கான செலவைக் குறைக்கிறது என்பதும் தான்.
உலக அளவிலும், இந்தியாவி லும் முதலாளித்துவ முறைமையின் துவக்க காலத்தில் பெண் தொழிலா ளிகள் நிலைமை எப்படிப்பட்ட கடும் சுரண்டலுக்கு உள்ளானதாக இருந்தது என்பதை ஆசிரியர் பல்வேறு விவ ரங்களுடன் படம் பிடித்துக் காட்டு கிறார். குறிப்பாக தேயிலைத் தோட்டம், சுரங்கம் போன்ற தொழில்களில் பெண் தொழிலாளிகள் படும் வேதனையை தத்ரூபமாக வர்ணிக்கிறார். ஒவ்வொரு கட்டத்திலும் அது சமூக சீர்திருத்தமானாலும் சரி, சுரண்ட லுக்கான நிவாரணமாக இருந்தாலும் சரி, எண்ணற்ற போராட்டங்களின் மூலமே அது சாத்தியப்பட்டது என்ப தை நூல் தெளிவாக விளக்குகிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்தி களின் கையில் ஆட்சி அதிகாரம் சென்ற தால் உழைப்புச் சுரண்டல் தொடர்வது குறித்தும், குறிப்பாக நவீன தாராளமய காலகட்டத்தில் இத்தகைய சுரண்டல் பல கோணங்களில் நடைபெறு வது குறித்தும் தமிழ்நாடு உள்ளிட்ட உதாரணங்களோடு முன்வைக்கப்படு கிறது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கருவுறும்போதே பாலின தேர்வு நடக்கும் பிற்போக்குத்தனத்தை இந்நூல் தோலுரிக்கிறது.
மனுவாதக் கோட்பாட்டை தகர்க்கும் கடமை
சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய மூன்றுமே பெண்ணடிமைத்தனத்தில் ஊடாடுவதும், பிராமணிய மேலா திக்கம், அதனை நியாயப்படுத்தும் மனுவாதக் கோட்பாடு போன்ற வற்றைத் தகர்க்கும் கடமை இத்துடன் இணைந்தது, அதே சமயம் இதனைத் தகர்ப்பது மட்டும் போதாது, வர்க்கச் சுரண்டல் அமைப்பை எதிர்க்கும் போராட்டத்தோடு ஒருங்கிணைய வேண்டும் என்பதும் நூலில் அறிவார்ந்த முறையில் முன்வைக்கப் படுகின்றன.
பெண் விடுதலைக்கும் மண் விடுத லைக்கும் சேர்த்தே குரல் கொடுத்த, களமாடிய அகில இந்திய, தமிழ்நாட்டுத் தலைவர்கள், குறிப்பாக கே.பி.ஜானகி அம்மாள் , பாப்பா உமாநாத், என்.எஸ். ருக்மணி அம்மாள், ஷாஜாதி உள்ளிட்டவர்க ளின் பங்களிப்பு இந்நூலில் இடம் பெற்றிருப்பது சிறப்பு சேர்க்கி றது. வீரத் தெலுங்கானா போராட்டமா னாலும், வார்லி ஆதிவாசிகளின் போராட்டமானாலும் பெண்கள் அவற்றில் காத்திரமான பங்கு வகித்தது படிக்கும் போதே நம்மை உத்வேகப்படுத்துகிறது.
அனைத்து அநீதிகளும் சுரண்ட லும் ஒடுக்குமுறையும் நடக்கும்போது அரசு என்ன செய்கிறது என்பது மிக முக்கியமான கேள்வி. அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி என்கிற அடிப்படையில் அநீதி களுக்கு முட்டுக் கொடுப்பதாகத்தான் அரசின் பங்கு பாத்திரம் இருக்கிறது. அதே சமயம் ரஷ்ய புரட்சிக்குப் பின் நிறுவப்பட்ட சோஷலிச அரசு, சுரண்ட லையும் ஒடுக்கு முறையையும் தகர்த்தது என்பது பெண் விடுதலைக்கு எவ்வாறு உரம் சேர்த்தது என்பதை யெல்லாம் ஆசிரியர் முன்வைக்கிறார்.
எனவே அப்போதைக்கான நிவார ணங்களுக்காக போராடுவதோடு, ஒட்டுமொத்த விடுதலைக்குக் களம் அமைக்கும் சோஷலிசம் மலர்வ தற்கான போராட்டத்தில் ஈடுபடுவதே மிக முக்கியம் என இந்த நூல் சிறப்பாக வாதாடுகிறது. ஏராளமான விவரங்களை ஒரே இடத்தில் வாசிக்க வழிவகுக்கும் இந்நூல் கண்டிப்பாக அனைவரது கையிலும் இருக்க வேண்டியதாகும்.
நூல் : பெண் அன்றும் இன்றும்
ஆசிரியர் : நர்மதா தேவி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
சென்னை
பக்: 512, விலை: ரூ.520-
சந்தித்த மனிதர்களின் கதைகள் தஞ்சை என்.சிவகுரு
தோழர் கலையரசன் எழுதிய “சுவியம்”சிறுகதை தொகுப்பில் உள்ள 11 கதைகள் வித்தியாசமான கதை களங்கள். பெண் சுதந்திரம்,உரிமை என முதல் கதை துவங்கி, மூடநம்பிக்கை ஒழிப்பு என கடைசி கதையோடு முடிகிறது.
ஒவ்வொரு கதையிலும் ஒரு விசயத்தை நூலாசிரியர் கடத்துகிறார்.
பெண் சுதந்திரம் என்றால் என்ன ...உறவு எனும் சொல்லுக்கான உண்மை அர்த்தத்தை விளக்கும் ஒரு ஏழை தம்பதியர் ஒரு உயிரை எப்படி காப்பாற்றுவதற்கு துணையாக நின்றார்கள்..
கிராமப்புறங்களில் இன்றும் ஓரளவுக்கு இருக்கும் ஒப்பாரி ..அதை தொழிலாக செய்யும் ஒரு கிழவியின் வாழ்க்கை..
புத்தகத்தின் தலைப்பு கதையான சுவியம் எனும் தின்பண்டம் பின்னால் சொல்லும் குடும்ப உறவுகள், கூட்டுக்குடும்பத்தின் சுகம் ..அதனின் சுவைகள்
ஒருவரை அழைக்கும் சொல்...அந்த சொல்லுக்கு பின்னால் உள்ள நியாயமான அரசியல் பின்னணி...
தமிழ்நாட்டை மட்டுமல்ல நாட்டையே பிரிக்கும் சாதியை மையமாக வைத்து புனைந்துள்ள கதை ,நெஞ்சை உருக்கும்.
மனிதனை மட்டுமல்ல ,வளர்க்கும் விலங்குகள் மீது கூட சாதிய வன்மத்தை செலுத்தும் வெறித்தனம் ...கொடுமை.
முதுமை வரும் போது வாழ்ந்த அருமையான நாட்களை விட்டு வேறு ஊர்க்கு செல்லும் உளவியல் பிரச்சனை ...
மாற்று திறனாளிகளிடத்தில் இருக்கும் அறிவு ..அதை அவர்கள் காட்டும் விதம்..அதுவும் சமூகத்தில் எத்தகைய மாற்றங்கள் உருவாகிறது என தொகுப்பின் சுவை அறுசுவை தான்..
தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட, சந்தித்த மனிதர்கள் ..அதையொட்டிய சம்பவங்கள் எல்லாமே தோழர் கலையரசன் அவர்களின் கதை மாந்தர்கள்..இராமநாதபுரத்தின் வட்டார சொற்கள் ஆங்காங்கு கதைகளின் ஊடாக வருகிறது. சில தட்டச்சு பிழைகளும் உள்ளன..
தோழர் கலையரசன் பெயருக்கு ஏற்றாற் போல் கலை படைப்பு தொடுத்து வைத்த பூமாலையை போல் நன்றாகவே வந்துள்ளது.
நூல்:சுவியம் (சிறுகதைகள்)
ஆசிரியர்:மங்களக்குடி
நா.கலையரசன்,
வெளியீடு: மாற்று ஊடக மையம்,
19B | F1, முனுசாமி தெரு, வெங்கடேஷ் நகர், விருகம்பாக்கம்,
சென்னை - 600092,
பக்: 168, விலை: ரூ175