tamilnadu

10 ஆண்டு கால மோடி ஆட்சிக்கு பலத்த அடி! தமிழ்நாடு - புதுவையின் 40 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வரலாற்று வெற்றி!

சென்னை, ஜூன் 4 - பதினெட்டாவது மக்களவைத் தேர்தலில், 10 ஆண்டு கால மோடி ஆட்சிக்கு நாட்டு மக்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர் என்றும், தமிழ்நாடு - புதுவையின் 40 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணிக்கு வரலாற்று வெற்றியை அளித்துள்ள வாக்காளப் பெருமக்களுக்கு நன்றியை தெரி வித்துக் கொள்வதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

தனித்த ஆட்சிக்கு முடிவு கட்டிய வாக்காளர்கள்

“2024 நாடாளுமன்றத் தேர்தல் முடி வுகள் வெளியாகிக் கொண்டிருக்கின் றன.  பாஜகவின் அதிகார பலம், தில்லு- முல்லுகள், பண பலம், வெறுப்புப் பேச்சுகள் இவைகளை முறியடித்து, பாஜகவின் தனித்த ஆட்சிக்கு வாக்கா ளர்கள் முடிவு கட்டியுள்ளனர்.

பாஜகவின் கோட்டையாகக் கருதப் பட்ட உத்தரப் பிரதேசம் உள்பட பல் வேறு மாநிலங்களில் பாஜக படு தோல்வி அடைந்துள்ளது. திட்டமிட்டு திணிக்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வாக்காளர்கள் தவிடுபொடியாக்கியுள்ளனர். மோடி யின் (சார் சோ பார்) 400+ என்ற முழக்கம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகார பலத்தை மீறி இந்தியா கூட்டணிக்கு ஆதரவு

தமிழகம், புதுவையில் திமுக தலை மையிலான ‘இந்தியா’ கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள் ளது. தமிழகத்தில் மதவெறி சக்திகளின் பண பலம், அதிகார பலம் தேர்தல் வரம்பு மீறல்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி ‘இந்தியா’ அணி வர லாறு காணாத சாதனை படைத்துள் ளது. நரேந்திர மோடி எத்தனை முறை படையெடுத்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்பதை தமிழக வாக்காளப் பெருமக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் களுக்கு வாக்களித்த தமிழக வாக்கா ளப் பெருமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது  நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டு க்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

முதல்வர் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுக்கு நன்றி

இக்கூட்டணியின் வெற்றிக்காக மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பணியாற்றி, பரப்புரையும் மேற்கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மிகுந்த  நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.

இத்தேர்தலில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட் பாளர்களை அமோகமாக வெற்றி பெறச் செய்திட்ட வாக்காளப் பெருமக்க ளுக்கும், இவர்களது வெற்றிக்கு அய ராது உழைத்திட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், ஊழியர்களுக்கும் மற்றும் தேர்தல் பணியாற்றிய மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரி வித்துக் கொள்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அகில இந்திய - மாநிலத் தலைவர் களின் தேர்தல் பரப்புரைச் செய்தி களை மக்களுக்கு வெளியிட்டு உதவிய ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக் கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள் கிறோம்.

மதவெறி சக்திகளுக்கு எதிராக உறுதியுடன் போராடுவோம்!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணி 370  இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அனைத்து ஊடகங்களும் தெரி வித்தன. ஆனால், அக்கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, பாஜகவிற்கு செல்வாக்குள்ள உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் சரிவை அக்கட்சி சந்தித்துள்ளது. கடந்த  10 ஆண்டு கால நரேந்திர மோடி அரசின் நாசகர ஆட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் மதவெறி சக்தி களை எதிர்த்தும், மக்களின் வாழ்வா தாரத்தைப் பாதுகாக்கவும், ஜனநா யக உரிமைகளைப் பேணிக் காக்க வும், அனைத்து மதச்சார்பற்ற சக்தி களும் இணைந்து பணியாற்றும். அதில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமை யான பங்கினை ஆற்றும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.