விழுப்புரம் மாவட்டத்தில் சுடர் பயணத்திற்கு சிறப்பான வரவேற்பு
விழுப்புரம், மார்ச் 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 வது மாநாடு மதுரையில் நடை பெறுவதையொட்டி,சிந்தனை சிற்பி சிங்கார வேலர் நினைவு சுடர்ப் பயண குழு சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரை செல்கிறது. மாநில செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி,மாநில குழு உறுப்பி னர்கள் எஸ்.வாலண்டினா, எஸ்.நம்பு ராஜன், எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தலை மையிலான பயணக்குழுவுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திண்டிவனம் மேம்பாலம் அருகில் வட்டச் செயலாளர் ஏ.கண்ண தாசன் தலைமையிலும் மயிலத்தில் ஒன்றியச் செயலாளர் டி. கஜமூர்த்தி, விழுப்புரத்தில் வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வரவேற்புக் குழுத் தலைவர் ஆர்.ராம மூர்த்தி, கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கீதா, தமிழ்நாடு பார் கவுன்சிலர் உறுப்பினர் எ.கோதண்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார்,வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துக்குமரன், ஏ.சங்கரன், ஆர்.மூர்த்தி, ஜி.ராஜேந்திரன், ஆர்டி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எ.கிருஷ்ணமூர்த்தி,பி.சிவராமன், எஸ் . பிரகாஷ்,வட்டச் செய லாளர் எஸ்.கணபதி, ஒன்றிய செயலாளர் ஏ.ராஜீவ்காந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.