மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை கண்டித்து வியாழனன்று (ஜூன் 21) சுதந்திர தின பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதி பகுதிச் செயலாளர் வெ.ரவீந்திர பாரதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியம், பகுதி குழு உறுப்பினர் பி.ஏழுமலை, புஷ்பா நகர் பெண்கள் கிளை செயலாளர் பி.பரமேஸ்வரி ஆகியோர் பேசினர்.