tamilnadu

img

நீண்ட நெடிய போராட்டத்தில் 65 ஆண்டுகால கனவு நிறைவேறியது! அத்திக்கடவு - அவினாசி திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது!

சென்னை, ஆக.17- அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சனிக்கிழமையன்று (ஆக.17) காணொளிக் காட்சி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி ஆறு, கேரள  மாநிலத்தில் பயணித்து மீண்டும் தமிழ்  நாட்டில் அத்திக்கடவு வந்து சேர்கி றது. பின்னர் பில்லூர் அணை வழியாக  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் பவானி ஆற்று நீர்,  மேலும் 75 கிலோ மீட்டர் தூரம் பய ணித்து காவிரி ஆற்றில் கலக்கிறது.

மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின்போது, ஆற்றில் வீணாகும் தண்ணீரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில்  வறட்சிப் பகுதிகளில் உள்ள 1045 குளங் களுக்கு கொண்டு செல்லும் வகை யில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்  உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக 1957-ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வர் காமராஜரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். எனினும் 1972- ஆம் ஆண்டில் கலைஞர் தலைமையி லான திமுக அரசால் கொள்கை ரீதி யாக இத்திட்டம் ஏற்கப்பட்டு அதனை  செயல்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. 

ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் கிடப்  பில் போடப்பட்டது. மீண்டும் திமுக  ஆட்சி அமைந்த பின் 1990-ஆம் ஆண்டு  அத்திக்கடவு - அவிநாசித் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் கலை ஞர் முயற்சிகளை மேற்கொண்டார். ஆட்சி மாற்றம் காரணமாக ஜெய லலிதா ஆட்சியில் மீண்டும் இத்திட்டம்  கிடப்பில் போடப்பட்டது. பிறகு, எடப்  பாடி ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது.

ரூ.1916 கோடியே 41 லட்சம் மதிப்பி லான இந்த திட்டம் பல்வேறு தடை களைத் தாண்டி, முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் மேற்கொண்ட தீவிர முயற்சி யின் பயனாக அத்திக்கடவு - அவி நாசி திட்டப் பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் சனிக்கிழமை (ஆக.17)  காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த  நிகழ்ச்சிக்கு நீர்வளத்துறை அமைச்சர்  க.துரைமுருகன் முன்னிலை வகித்தார். 

இத்திட்டத்தின் தொடக்க விழா  பவானி காலிங்கராயன் அணைக்கட்டு  முதலாவது நீரேற்று நிலையத்தில் நடைபெற்றது. இத்திட்டம் செயல்பாட்  டுக்கு வருவதன் மூலம் ஈரோடு, திருப்  பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில்  உள்ள 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவ சாய நிலங்கள் பயன்பெறும்.

நாட்டின் பொருளாதார வளர்ச் சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்  படுத்தும் வகையில், மக்களின் குடி நீர் தேவைகளை பூர்த்தி செய்யவும்,  கிடைக்கப் பெறும் நீரை வீணாக்கா மல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டு, புதிய நீராதாரங்களை உரு வாக்குதல், ஏற்கெனவே உள்ள நீர்  நிலைகள் மற்றும் அதன் உட்கட்ட மைப்புகளை நல்ல முறையில் பரா மரித்தல், பாசனக் கட்டமைப்புகளான அணைகள், அணைக்கட்டுகள், நிலத்  தடி தடுப்புச் சுவர்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் போன்ற வற்றை உருவாக்குதல், புனரமைத் தல் மற்றும் பராமரித்தல் போன்ற பல்  வேறு முக்கிய பணிகளை நீர்வளத் துறை மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்து வதன் மூலம் பவானி ஆற்றில் காளிங்  கராயன் அணைக்கட்டு கீழ்ப்புறத்தி லிருந்து ஆண்டொன்றிற்கு 1.50 டி.எம்.சி உபரி நீர் விநாடிக்கு 250 கன அடி  விகிதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறை யில், 1065 கி.மீ. நீளத்திற்கு நிலத்தடி யில் குழாய்ப் பதிப்பின் மூலம் ஈரோடு,  திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24 ஆயி ரத்து 468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42  ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டை கள் என மொத்தம் 1045 எண்ணிக்கை யிலான ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படும்.

திட்டத்துக்கான பம்பிங் ஸ்டே ஷன்களுக்கு கடந்த அதிமுக ஆட்சி யில் நிலம் கையகப்படுத்தப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், திமுக ஆட்சி வந்த பின்பு  தான் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  இந்த பணி நிறைவேற்றப்பட்டது என்  பது குறிப்பிடத்தக்கது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நீண்ட காலக் கனவான அத்திக்  கடவு அவிநாசி திட்டம் நீண்ட நெடிய  போராட்டத்திற்கு பிறகு செயல்பாட் டுக்கு வந்துள்ளது.