குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 53 உயிரிழந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 49 உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 24 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்; தமிழநாட்டை சேர்ந்தவர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.