சென்னை, டிச. 14 - திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்தில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமது சமூகவலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஆழ்ந்த இரங்கல்
திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டிசம்பர் 12-ஆம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. இந்த விபத்தில் 50-க்கும் மேற் பட்டோர் வெளியே வரமுடியாமல் திணறியுள்ள னர். பலத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும் பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத் தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடரும் துயரம்
ஏற்கெனவே இந்தியாவில் பல மாநிலங்க ளில் இதுபோன்ற தீ விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் உத்தரப்பிர தேசத்தில் ஜான்சி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங் குழந் தைகள் உயிரிழந்தன. இதுபோன்ற விபத்துக் களை தடுப்பதற்கு, பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டியதும் அவசி யமாகும்.
விசாரணை வேண்டும்
திண்டுக்கல்லில் நான்கு மாடி கொண்ட இந்த தனியார் மருத்துவமனையில் கட்ட மைப்பு வசதிகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக பின்பற்றப்பட்டிருக்கிறதா, என்பது குறித்து தமிழக அரசு உரிய முறை யில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விதி முறைகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென கேட்டுக் கொள்கிறோம்.
இழப்பீட்டை உயர்த்துக
இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்ப தற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைக ளையும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பரா மரிக்கப்படுகிறதா, என்பது குறித்து ஆய்வு களை மேற்கொள்ள வேண்டுமெனவும், விதி முறைகளை மீறும் மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 3 லட்சம் நிவா ரண நிதியினை உயர்த்தி தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.