மாமல்லபுரம் அருகே அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு
மாமல்லபுரம் அருகேயுள்ள மனமை பகுதியில் அரசுப்பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவிலிருந்த 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்
விபத்துகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 6 பேரின் உடல்களையும் மீட்டு உடற்க்கூறாய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.