சென்னை, ஜூன் 24 - 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க கோரி திங்க ளன்று (ஜூன் 24) மாநகர போக்குவரத்து கழகத்தில் 6 மையங்களில் உண்ணா நிலை போராட்டம் தொடங்கியது. கழகங்களின் வர வுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க வேண்டும்,
ஓய்வூதி யர்களுக்கு வழங்கப்படா மல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. பல்லவன் இல்லம் முன்பு அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயா னந்தம், நிர்வாகிகள் எம்.சந்திரன், பக்தவச்சலம் உள்ளிட்டோர் பேசினர். திருவான்மியூர் பணி மனையில் சங்கத்தின் துணைத்தலைவர் ஜி.வெங்கடேசன் தலைமை யில் நடைபெற்ற போராட் டத்தை சிஐடியு தென் சென்னை மாவட்டச் செய லாளர் பா.பாலகிருஷ்ண னும், தாம்பரம் பணி மனையில் சங்கத்தின் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு தென்சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடியும், வடபழனி பணிமனையில் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் சிவா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு மாவட்ட துணைச் செய லாளர் எஸ்.சந்தானமும் தொடங்கி வைத்தனர்.
ஆவடி பணிமனையில் சங்கத்தின் நிர்வாகி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரனும், திரு வொற்றியூர் பணிமனையில் சங்கத்தின் நிர்வாகி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமியும் தொடங்கி வைத்தனர். சங்கத்தின் தலை வர் ஆர்.துரை, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர்கள் டி.குருசாமி, வீரராகவன், ஆதி மூலம் ஆகியோர் இந்த போராட்டங்களில் கோரிக் கைகளை விளக்கி பேசினர்.