“விஷச்சாராய மரணங்களில் 48 பேர் உயிரிழப்பு என்பது குஜராத், உத்திரப் பிரதேசத்தில் கூட நடக்கக்கூடாத செய்தி. திமுக ஆட்சியில் இரண்டாம் முறை நடந்திருக்கிறது என்பது முற்றுமுதலாக அரசின் நிர்வாகத் தோல்வி. எத்தனை கான்ஸ்ப்ரசி தியரிகளோடு இந்தப் பிரச்னையை அணுகினாலும் பொறுப்பைக் கையில் வைத்திருக்கும் அரசின் தோல்வி இது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான அரசின் நிவாரண உதவிகள் மிக முக்கியமானது. வரவேற்கத்தக்கது. அவற்றை கேலி செய்பவர்கள் அரசியல் தற்குறிகள். கள்ளச் சாராய மரணங்கள் இனி தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருப்பதே நீதி.” என்று ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் குறிப்பிட்டுள்ளார்.