tamilnadu

போக்குவரத்துக் கழகங்களுக்கு 400 புதிய பேருந்துகள்

 சென்னை,ஜூன் 27- அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 400 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளன. இதில் 200 பேருந்துகளை அரசு விரைவு  போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்க போக்கு வரத்துத் துறை முடிவு செய்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை இயக்க தமிழக அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 316 புதிய பேருந்துகள்  அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்டன. இதில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 100 நவீன  பேருந்துகள் வழங்கப்பட்டன. இவை தவிர  மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கும், விரைவு போக்குவரத்து கழகத்துக்கும் புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டன. தற்போது, அரசு விரைவு போக்கு வரத்துக் கழகத்தில் 110 வழித் தடங்களில் 675 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்  டோர் பயணம் செய்கிறார்கள். மற்ற போக்கு வரத்துக் கழகங்களிலும் லட்சக்கணக்கா னோர் பயணம் செய்கின்றனர். தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்க ளுக்கு 400 புதிய பேருந்துகள் வழங்கப்பட உள்ளன. இதில் 200 பேருந்துகளை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இவை அதிக பயணிகள் செல்லும் இடங்களுக்கும், கேரளாவுக்கும் இயக்கப்பட உள்ளன. இவை சொகுசு பேருந்து களாகும். 200 பேருந்துகள் மற்ற 5 போக்கு வரத்துக் கழகங்களுக்கு வழங்கப்படுகின் றன. இவற்றை சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு  செய்வற்கான நடவடிக்கைகள் தொடங்கி யுள்ளன. எந்தெந்த வழித்தடங்களில் எத்  தனை புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்து விரைவில் தெரியவரும்.