tamilnadu

img

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்களுக்கு தடை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே.  ஆம்ஸ்ட்ராங். கடந்த ஜூலை  5 அன்று சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். இந்த கொலை வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. மேலும், இவ்வழக்கு முடியும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.