tamilnadu

img

33 ஆயிரத்து 600 ஆரம்ப நிலை காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

33 ஆயிரத்து 600 ஆரம்ப நிலை காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பிரதமரின் சூரிய மின் திட்டத்தை செயல்படுத்த நிர்பந்திக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (மார்ச் 12) வள்ளுவர் கோட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய சென்னை கிளைத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் எம்.தயாளன், எஸ்.கண்ணன், கௌரி உள்ளிட்டோர் பேசினர்.