tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

யூடியூப் பார்த்து துப்பாக்கி  தயாரித்த 3 வாலிபர்கள் கைது  

கடலூர், ஏப்.23- கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள காடாம்புலியூர் பகுதியில்  3 இளைஞர்கள் யூடியூப் பார்த்து பிளாஸ்டிக் துப்பாக்கிகள் தயாரித்துள்ளனர்.  துப்பாக்கி செய்வதற்கு தேவையான உதிரி பொருட்களை கடைகளில் வாங்கி 2 துப்பாக்கிகள் வடிவமைத்துள்ளனர். பால்ரஸ் குண்டுகளைக் கொண்டு இயக்கப்படும் இந்த துப்பாக்கிகள் மூலம் முந்திரி காட்டுப்பகுதியில் காட்டு பன்றிகள், முயல்கள் ஆகியவற்றை வேட்டையாடி வந்துள்ளனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.  அப்போது வேலங்குப்பம் அய்யனார் கோவில் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த விக்ரம் (வயது 25), சந்தான பிரபு (32), மணிகண்டன் (25) ஆகிய 3 நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர். சீனிவாசா கல்வி அறக்கட்டளை மாணவர்களுக்கு நிதி உதவி  கிருஷ்ணகிரி, ஏப்.23- ஊத்தங்கரையில் உள்ள சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் சார்பில், விளையாட்டு வீரா்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது.   நேபாள தலைநகா் காத்மாண்டில் வரும் மே 14 முதல் 19 வரை சா்வதேச அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப்  போட்டி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க அதியமான் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் த.மோனிகா, கோ.கவிபிரியா, அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவன் ர.மௌரிஷ், 4 ஆம் வகுப்பு மாணவி ர.ஸ்ரீவாணி தகுதி பெற்றுள்ளனா்.   இப்போட்டியில் பங்குபெற காத்மண்டு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் இயக்குநரும், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான சீனி. திருமால்முருகன் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ30ஆயிரம் வீதம் 1 லட்சத்து 20 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மாவட்ட செஞ்சிலுவைச் சங்க செயலாளா் செந்தில்குமார், அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால்முருகன், நிர்வாக அலுவலா் சீனி.கணபதிராமன்,முதல்வா் சீனி.கலைமணி சரவணகுமார் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் பங்குபெற காத்மாண்டு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

நல்லவன் பட்டியில்  மயானபூமி ஆக்கிரமிப்பு'

கிருஷ்ணகிரி, ஏப்.23-  ஊத்தங்கரை, நல்லவன் பட்டியில் மயானபூமியை ஆக்கிரமிக்கும் முயற்சி தற்காலிகமாக முறியடிக்கப்பட்டது.  ஊத்தங்கரை வட்டம், பாவக்கல் அருகே நல்லவன்பட்டியில் வசித்துவரும் மக்கள் 3 தலைமுறையாக இறந்தவர்களை அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்து வந்தனர்.தற்போது அந்த  இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருவதாக தெரிய வருகிறது.   செவ்வாயன்று அதே கிராமத்தை சேர்ந்த பலராமன் என்பவர்  உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய வழக்கம் போல் மயானபூமிக்கு எடுத்துச் சென்றபோது ஏழுமலை என்பவர் இது எங்களுடைய இடம் இறுதிநிகழ்ச்சி செய்ய அனுமதிக்கமுடியாது என தடுத்துள்ளார். இதனால் கொந்தளித்த மக்கள் பலராமன்  உடலை அங்கேயே வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர்,வருவாய் ஆய்வாளர்,  மண்டல துணை வட்டாட்சியர், காவல்துறையினர்,அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி இறந்தவரின் உடலை அடக்கம்செய்ய ஏற்பாடு செய்தனர். இதையொட்டி தற்காலிகமாக சமரசம் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விளையாட்டு விடுதிகளில் சேர  விண்ணப்பிக்க ஆட்சியர் தகவல்

கடலூர், ஏப்.23- விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனமாவட்ட ஆட்சியர்  ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.  பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கேற்ப, அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்கும் இடம் மற்றும் உணவு வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) சார்பில் 28 இடங்களில் செயல்பட்டு  வருகின்றன.    இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 18.04.2025 முதல் WWW.sdat.tn.gov.in என்ற  இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.   விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும்  மாணவ - மாணவிகள்  விண்ணப்பத்தை 5.5.2025 அன்று  மாலை 5 மணி வரை இணையதளத்தில்  பதிவேற்றம் செய்யலாம். தேர்விற்கு இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 9514000777 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

வேலூரில் ஜாக்டோ-ஜியோ  ஆர்ப்பாட்டம்

தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை  நடைமுறைபடுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் முறை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் வேலூர்  அண்ணா கலையரங்கம் அருகில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டி.டி.ஜோஷி, ஆ.ஜோசப்அண்ணையா, எம்.ஜெயகாந்தன், ஜி.சீனிவாசன், சகேயு சத்யகுமார் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள்  முகமது ஷாநவாஸ், அக்ரி.இ.ராமன் ஜி.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் எம்.சினேகலதா, செ.நா.ஜனார்த்தனன் (தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்) ஜி.டி.பாபு (ஆசிரியர் முன்னேற்ற சங்கம்) எ.டி.அல்போன்ஸ்கிரி (தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்) ஆகியோர் பேசினர். இந்த போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தோழர் லீலாவதி நினைவு தினம்

தோழர் கே.லீலாவதி நினைவு தினத்தையொட்டி சிபிஎம் திருவண்ணாமலை மாவட்டக் குழு அலுவலகத்தில், அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் எம்.சிவகுமார், மாவட்டச் செயலாளர் ப.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  எஸ்.ராமதாஸ், எம்.பிரகலநாதன்  மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.குமரன், உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

பழங்குடியின குடும்பத்தினருக்கு  மாற்று இடம் வழங்க கோரிக்கை

திருவண்ணாமலை,ஏப். 23- திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் வட்டம் வீரப்பனூர் மதுரா பர்கூர் கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இந்திராணி, சிவ மணி, பொன்னுசாமி ஆகி யோர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இவர்கள் பல தலை முறைகளாக மலைப்பகுதி யில் சிறுதானியங்கள் சாகு படி செய்து வசித்து வரு கின்றனர். இந்நிலையில், தமிழக அரசு பழங்குடி யினர் நலத்துறை சார்பில் உண்டு உறைவிட பள்ளிக்கு கூடுதல் கட்டி டம் கட்டுவதற்காக மேற்கண்ட மூன்று குடும்பத்தினர் பயன்படுத்தி  வந்த நிலங்களை கையகப் படுத்தியுள்ளது. இதனால் வாழ்வா தாரம் இழந்து தவிக்கும் பழங்குடியின குடும்பத்தி னர்களுக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும்,   அவர்களுக்கு வீட்டு மனையும், ஜென்மன் (பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான்) திட்டத்தில் தொகுப்பு வீடும் வழங்க வேண்டும் என, ஜமுனா முத்தூர் வட்டாட்சி யர் அலு வலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  தமிழ்நாடு பழங்குடி யினர் ஆன்றோர் மன்ற உறுப்பினர் இரா. சரவணன், சிபிஎம் வட்டார செயலாளர் ரவிதாஸ், பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்கள் ஆகியோர் ஜமுனாமரத்தூர் வட்டாட்சியரிடம் அந்த கோரிக்கை மனுவை அளித்தனர்.

பல்கலைக்கழக போராட்டக்குழுவினர்  உயர்கல்வி துறை அமைச்சரை சந்தித்து மனு

சிதம்பரம், ஏப்.23- அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் 15 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் உயர்கல்வித்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு அனைத்துவிதமான ஓய்வூதிய பயன்களையும், பண பலன்களையும் உடனடி யாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 15வது நாளாக இரவு, பகல் பாராமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியனை அவரது அலுவலகத்தில் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினரும், காட்டு மன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச் செல்வன் தலைமையில் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ஓய்வூதியர்கள் நிலைமைகள் குறித்தும் அவர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பயன்களையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி மனு அளித்தனர். இதற்கு உடனடியாக முதல்வரின் கவ னத்திற்கு எடுத்துச் சென்று நடைபெறுகின்ற  சட்டமன்ற கூட்டத்தொடரில் நல்ல முடிவை அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.  இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.